(Reading time: 15 - 29 minutes)

ப்பு முழுக்க நீ உன் பையனுக்கு பார்த்து வச்சிருந்த பொண்ணால, அதுக்கு அந்த சினிமாக்காரனை குத்தம் சொல்ல முடியுமா? அது முடிஞ்சு போன கதைம்மா, இப்போ உன் பையனோட வாழ்க்கை சிறப்பா அமைய வேண்டாமா? விபு அண்ணாக்கு பொருத்தமான பொண்ணு அமையணும் இல்ல, அது ஏன் மதுரிமாவா இருக்கக் கூடாது..”

“நீ சொன்ன மாதிரி முன்ன தான் எல்லாம் தப்பா போச்சு, இனியாவது என் பையனோட வாழ்க்கை நல்லா இருக்க வேண்டாமா? சினிமால நடிக்கிற பொண்ணு என் பையனுக்கு பொருந்தி வருமா அச்சு..”

“அம்மா, மதுரிமா பழக நல்லவளா தான் தெரியுறா, பத்தாததுக்கு பாலா அண்ணாக்கு தங்கச்சி வேற, எல்லாம் சரியா வரும் ம்மா..”

“இருந்தாலும் நடிகைங்கன்னாலே அப்படி இப்படி கேள்விப் பட்றோம், இதுல மதுரிமா சாத்விக்கோட வேற நடிச்சிருக்கால்ல, நாளை பின்ன விபு சாத்விக்கை நேருக்கு நேரா சந்திச்சா, அவனுக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வராதா?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இப்போ மட்டும் அண்ணன் எல்லாம் மறந்துட்டா இருக்கு, கல்யாணம் பண்ணிக்கோன்னு நீ சொல்லிக்கிட்டே இருந்தா, அண்ணன் வேண்டாம்னு மறுக்க தான் பார்க்கும், நீதான் அதிரடியா ஒரு முடிவு செய்யணும், எதுக்கோ மதுரிமா பத்தி நல்லா யோசி, எனக்கு இது சரியா வரும்னு தான் தோனுது..” என்று சொல்லவும்,

“சரி விபு கொஞ்ச நாள் இங்க தானே இருக்கப் போறான்.. பொறுமையா யோசிப்போம் என்று மஞ்சுளா கூறினார்.

இவர்கள் பேசிய அதே நேரம், வீட்டிற்கு வந்து புவனா தன் அறைக்கு செல்லவும், பின்னாலேயே வந்த பாலா.. விபா, அஜயை பற்றி கேட்டதற்கு,

“ரெண்டுப்பேரும் நம்ம பொண்ணுங்களுக்கு பொருத்தமா தான் இருப்பாங்க.. நீ முன்ன சொன்னது போல, ப்ராஜக்ட் முதலில் ஆரம்பிங்க, அப்புறம் விபாக்கிட்ட இது சம்பந்தமா பேசு, அஜய். தேவி கல்யாணத்துக்கும் விபாக்கிட்ட தானே பேசணும், விபா என்ன முடிவு சொல்றானோ, அதுக்கேத்த மாதிரி அப்போ நாம மது, தேவிக்கிட்ட பேசுவோம், இப்போ பார்ட்டிக்கான வேலையை கவனி..” என்று கூறினார்.

அந்த நேரம் தேவி அறைக்கு வரவும், அங்கே அவளைப் பற்றி கேட்டதை சொல்லி, அவள் வராததை குறித்து புவனா கோபப்படவும், அவரை சமாதானம் செய்த பாலா,

“அதான் நம்ம வீட்ல பார்ட்டி அரேஞ் செஞ்சிருக்கோம் இல்லம்மா.. அதுக்கு விபா குடும்பத்தோட வருவான்.. அப்போ தேவி அவங்களை பார்க்க தானே போறா..” என்று சொல்ல,

அதில் கொஞ்சம் அதிர்ச்சியாகி, “என்ன பார்ட்டின்னா..” என்று அவள் கேட்க,

“புது ப்ராஜக்ட் ஆரம்பிக்கிறதுக்கான பார்ட்டி தேவி, கொஞ்சம் க்ராண்டான பார்ட்டி, நிறைய வி.ஐ.பி ங்களை இன்வைட் செய்யப் போறேன், நிறைய பிஸ்னஸ் மேக்னெட்ஸ்ல்லாம் வருவாங்க, ம்ம் சுஜனா அப்பாவும் நம்ம பார்ட்னர் இல்லையா? அதனால் சாத்விக் கூட வர வாய்ப்பிருக்கு..” என்று அவன் சொல்ல தேவிக்கு மயக்கம் வராத குறை தான்,

விபாகரனின் வீட்டுக்கு போகாமல் தப்பித்தவள், இந்த பார்ட்டியிலிருந்து எப்படி தப்பிக்க போகிறாள். அதுவும் விபாகரன் பார்வையிலிருந்து மட்டுமல்ல, சாத்விக் பார்வையிலும் படாமல் அவள் தப்பிக்க வேண்டும்.. முடியுமா?

மையல் தொடரும்..

Episode # 06

Episode # 08

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.