இந்த செயலை நான் செய்யமாட்டேன் என்று பிராங்கிடம் மறுத்திருந்தால் அவன் எனக்குப் பதில் வேறொருவனை அனுப்பி தமிழ்நாட்டை சூறையாடும் நடவடிக்கை எடுத்திருப்பான்.
எனவே நானே செய்வதாக சொல்லி இங்கு வந்தேன். மேலும் உள்ளிருந்தே இந்த பிளானை முறியடிக்கவும் மேலும் என்னை வீழ்த்தினாலும் கூட அவர்களிடம் உள்ள செல்வத்தை பயன்படுத்தி வேறு ஒருவனை அனுப்பி தமிழ்நாட்டை சூரையாடாமல் இருக்க, இதெற்கென ஒதுக்கப்பட்ட பெரும் செல்வத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டு இதோ அதை செயல் படுத்திகொண்டு இருக்கிறேன்.
இதோ பிராங்கின் பணம் முழுவதுவும் கானாமல் போனதை இன்னும் பதினெட்டு மணிநேரத்திற்குள் அவன் உணர்ந்து கதறி தேடி ஓடப்போகிறான்.
ஆறுமணிநேரத்தில் பங்குசந்தையை கண்காணிக்கும் செபி அந்நிய முதலீடு இந்தியாவின் தனிப்பட்ட நபர் யாழினி என்ற ஒருவரின் மூலம் அதிக அளவில் இன்வெஸ்ட் செய்யப்பட்டதால் இந்திய பங்கு சந்தையின் சென்சஸ் புள்ளிகள் உச்சத்தை தொடப்போகிறது. அந்த காரணி யார் என்று தேடப்பட்டு என் பேபி யாழிசையை நாளை அடையாளம் கண்டுவிடுவார்கள்.
அவர்கள் அவளை நெருங்குமுன் நாம் அவளை தூக்கி வந்துவிட வேண்டும் அவளை சுற்றி நம் டீம் மெம்பர்ஸ் எந்நேரமும் அலார்டாக இருகிறார்களா மாதவா?என்று கேட்டான் தீரன்.
“எஸ் பாஸ்” என்று கூறிய மாதவன் மேலும் அவனின் திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் சரியாக செய்திருப்பதை ஒருமுறை தெளிவுபடுத்தினான் தீரனிடம்.
மாதவன் ஏற்கனவே தீரன்மின் மேல் ஒரு பிரமிப்பும் பக்தியும் கொண்டிருந்தான் இந்நிலையில் யாழிசையிடம் அவன் நடந்து கொண்டிருந்த செயல்களின் மூலம் தீரனின் மேல் சற்று மனச் சினுக்கத்தில் இருந்தவன் இப்பொழுது தீரன் கூறிய விளக்கங்களில் அவனின் மனச்சினுக்கம் ஓடியே போய்விட்டது.
மேலும் அவன் சொன்ன தகவல்களின் அடிப்படையில் தன் தாய் பூமியை காக்கும் பணியினை தீரன் மேற்கொண்டிருகிறான் என்று தெரிந்ததும் அவனின் பக்தனாகவே ஆகிவிட்டான் மாதவன். ஏதோ ஒரு வகையில் தானும் அவனுக்கு உதவியாக இருப்பதை நினைத்தவன் அதை பெருமையாக உணர்ந்தான். மேலும் யாழிசையும் அவள் அறியாமலே இந்த விசயத்தில் ஈடுபடுத்தபட்டிருப்பதும் ஏனோ இப்பொழுது மாதவனுக்கு இப்பொழுது தவறாக தெரியவில்லை.
அவனுக்கு இப்பொழுது ஏற்பட்ட தீரனின் மேல் உள்ள பக்தியால் அவன் பியூச்சர் மனைவியாக யாழிசையை தேர்ந்தெடுத்ததை யாழிசைக்கு கிடைக்கும் பெரும் வெகுமதியாகவே அவன் நினைத்தான்.
மறுநாள் காலை யாழிசையை அவள் வீட்டில் இறக்கி விட சந்தியாவின் காரில் அழைத்துச் சென்றாள். சந்தியாவின் முகம் சோர்வாக இருந்தது. அவளின் சோர்வின் காரணத்தை யாழிசை அறிவாள்.
தனது தோழி அன்று இரவு தங்கியதே மிதுனனிடம் அவள் காதலை இன்று எப்படியாவது கூறிவிட வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான். ஆனால் சூழ்நிலை அவர்கள் இருவரும் பேசமுடியாமல் போனது .
எனவே யாழிசை சந்தியாவை இயல்பாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏண்டி இப்படி மூஞ்சியை தூக்கிவச்சுகிட்டு இருக்க. இன்னையோடவா காலேஜ் முடிஞ்சுடுச்சு . இனி வரும் நாட்களில் உன் ஆள்கிட்ட பேச சந்தர்ப்பம் கிடைகாமலேயா போய்விடப் போகிறது என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும் சந்தியா, இல்ல யாழ் இது மிதுனனின் பைனல் இயர் மேலும் இனிமே ப்ராஜெக்ட் வொர்க் தான் நிறைய இருக்கும் சோ காலேஜுக்கு மிதுனன் இனி அவர் ப்ராஜெக்ட் வோர்க் பிரசன்ட் செய்வதற்கு மட்டும் தான் வருவான். அதனால்தான் இன்னைக்கே என் மனதில் உள்ளதை அவரிடம் சொல்லிடனும் என்று நினைத்தேன்.
இன்னொன்று உனக்கு தெரியுமா யாழிசை! நான் மட்டும்தான் அவனை விரும்புகிறேன். ஆனால் இவன் என்னை இதுவரை காதலாக ஒரு முறை கூட பார்த்தது இல்லை. எனக்குத் தெரியும் அவன் என்னை காதலிக்கவில்லை என்று. அவரின் கண் உன்னை மட்டுமே சுற்றுவதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டு போனவளை தடுத்து.
ஏய்...! நிறுத்து சந்தியா, அப்படியெல்லாம் இல்ல... நீ வீனா போட்டு மனதை உலட்டிகாதே. நான் மிதுனனை குட் பெர்சன் என்பதை தாண்டி வேறு யோசித்துகூட பார்ததுயில்லை. அப்படி என்றுமே நினைக்கவும் மாட்டேன் என்று கூறினாள்,
அவள் பதற்றத்தை கண்ட சந்தியா, நீ எதுக்கு இப்போ டெண்சனாகுற! எனக்குத்தெரியும் நீ மிதுனனை விரும்பல . மேலும் நான் அவரை விரும்புவதை நீ தெரிந்து கொண்டதால். அவரின் காதலை கண்டிப்பாக நீ ஏற்றுக்கொள்ளமாட்டாய் என்று எனக்குத்தெரியும்.
ஆனால் இப்போ நான் சொல்வதை நீ எப்படி எடுத்துக் கொள்ள போகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. என் மனதில் உள்ளதை உன்னிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருக்க நான் விரும்பவில்லை
என்று கூறிவிட்டு தன்னை திடப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தால் சந்தியா .