ஒருவிதகலவையான உணர்வு உத்ராவை ஆட்கொண்டு இருந்தது. பரத் மெளனமாய் அவளுக்கு உணவு பரிமாறிக்கொண்டு இருந்தான். சுவை மிகுந்த உணவுதான் என்றாலும் அந்த ரம்யமான சூழ்நிலையெல்லாம் வசிகரிக்க முடியவில்லை, தரையிலிருந்து 100 அடி தூரம் சீட்பெல்ட்டோடு பாதுகாப்பான சூழ்நிலையிருந்தாலும் எங்கோ மிதந்து கொண்டு கடற்காற்றும் மனம் கவர்ந்தவளின் நெருக்கமான நிலை என்று பரத்தின் மனநிலையிலும் அதே போல் மிதந்து கொண்டுதான் இருந்தது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
தன் மனதின் காதலை அவளிடம் சொல்ல முடியாமல் போனது நடுவில் நீரஜாவின் விஷயமும் வேறு சேர்ந்துகொண்டது, எப்போது ஒரு சந்தேகம் வந்து விட்டதோ இதற்கு மேல் அதை வளரவிடக் கூடாது. ஆனால் ஒவ்வொரு முறையும் உத்ராவிற்கு என்னுடைய நிலைமையைப் புரிய வைத்துக்கொண்டே இருப்பது நல்லதா ?! அதிலும் என் மனதில் இப்போது முளைத்திருக்கும் இந்த நேசத்தை .... ச்சே என்ன ரம்மியமான சூழ்நிலை இங்கே வைத்து அவள் நெகிழ்ந்திருக்கும் நேரத்தில் என்னோட காதலை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இதெல்லாம் நீரஜா யார் என்று உத்ராவின் சந்தேகத்தனமான கேள்வியில் முடிந்துவிட்டதே !
ஆயிரம் முறைகள் பேசினாலும் இனிமேல் அவளை நம்ப வைக்க முடியும் என்று தோன்றவில்லை, இதற்கு முடிவு என்ன எப்படியாகிலும் இந்த விருந்து முடிந்து கிளம்புவதற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்
பரத் திரும்பி உத்ராவைப் பார்த்தான். அவள் சாப்பிடுவதைப் போல கொறித்துக் கொண்டு இருந்தாள் தன் பேண்ட் பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக்கொண்டான். கொண்டு வந்திருந்த உயர்ரக துப்பாக்கி அதற்குள் பத்திரமாய் என்னை எப்போது உபயோகப்படுத்த போகிறாய் என்று கேள்வி கேட்டபடி இருந்தது. ஒரு ஆழமான பெருமூச்சை எடுத்துக்கொண்டு துப்பாக்கியை எடுத்து உத்ராவை நோக்கி நீட்டினான் பரத்...
தொடரும்...
Go to Kathal Ilavarasi story main page
{kunena_discuss:1201}