இந்த நேரத்தில் இது மாதிரி ஒரு சினிமாவை ஏன் பார்த்தோம் என்று தன்னையே நொந்துகொண்டாள்.
அருமையான படம்தான். ஆனால் கண்ணை மூடினால் அந்த கொள்ளையர்களின் மனிதத்தன்மை அற்ற செயலே கண்ணுக்குள் வந்து அவளைத் தொந்தரவு செய்தது.
தனியாக இருக்கும் வேளையில் பயம் கொள்ள ஆரம்பித்தாள்.
இதே மாதிரி இங்கேயும் வந்துவிட்டால் என்ன செய்வது?
கணவன் அருகே இருக்கும்போது எந்த பயமும் தெரிவதில்லை. ஆனால் அவன் வெளியில் சென்றுவிட்டாலோ அவளது பயம் ஓடிவந்து அவளைத் தொற்றிக்கொள்கிறது.
என்ன செய்வது என்று தெரியவில்லை.
“ஏன்க்கா? இந்த அளவு பயந்தாகொள்ளியா இருக்கே?”
போனில் பேசும்போது அவளது பயத்தைக் கண்டு மனோரஞ்சனியே அவளைத் திட்டினாள்.
தன் பயத்தை விட்டுவிட்டுப் படிப்பில் கவனத்தைச் செலுத்த முனைந்தாள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ுகையும், ஆத்திரமும் வந்தது. ஆனாலும் வெட்கத்தை விட்டு அவனிடம் நானும் ஊருக்கு வருகிறேன் என்று சொல்ல வாய் வரவில்லை.
தனக்கு நாளை பரிட்சை இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். இருந்தும் அவன் தன்னை விட்டுவிட்டுக் கிளம்புகிறான் என்றால் தான் பரிட்சை எழுத வேண்டாம் என்றுதானே அவன் நினைக்கிறான்.