(Reading time: 16 - 32 minutes)

“இதோ பாரு திவா இப்பவும் உன்னை நா சந்தேகப் படுறேனா எனக்கு தெரில ஆனா ஒருவித ஏமாற்றம் வலி..என் திவா என்கிட்ட உண்மையா இல்ல..என்கிட்ட கூட மறைக்குற அளவு ரகசியங்கள் அவன்கிட்ட இருக்குனு நினைச்சு நினைச்சு கடுப்பாகுது.இன்னும் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கல..

எப்படியும் என் கேள்வி அத்தனைக்கும் ஒரு பதில் வச்சுருப்ப அதையும் சொல்லிடு..நானும் நம்புவேன்.அதான் அதிகபடட்ச காமெடியே..”

பேசி முடித்தவள் தங்களறைக்குள் சென்று மெத்தையில் விழுந்து குலுங்கி அழத் தொடங்கியிருந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

திவ்யாந்திற்கு இன்னமும் அவளின் வார்த்தைகளில் இருந்து மீள முடியவில்லை.இப்படி ஒரு கோணத்தை அவன் யோசித்திருக்கவில்லை என்பதே உண்மை.

என்ன இருந்தாலும் இது அவன் வேலை வட்டாரம் சம்மந்தப்பட்ட விஷயம் அதுமிட்டுமில்லாமல் இதை கூறி வெண்பா வீணாக பயந்துவிட கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணம்.

ஆனால் இதற்கு அவள் இத்தனை வருத்தப்படுவாள் என எண்ணியிருக்கவில்லை.முகத்தை அழுந்த துடைத்தவன் இருக்கையில் இருந்து எழுந்து சிந்தாம்மாவை பார்த்தான்.

“தம்பி என்கிட்ட சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.என் பிள்ளை எது பண்ணிணாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்..பாவம் பாப்பா ரொம்ப பாசம் வச்சுருக்கா உன் மேல அதனால தான் இத்தனை கோபப்படுது.போ போய் சமாதானப்படுத்துயா..”

தங்களறைக்குள் நுழைந்தவன் வெண்பாவின் அருகில் அமர்ந்து அவள் தலை தொட சட்டென எழுந்து அமர்ந்தாள்.அழுதழுது முகமே வீங்கியிருந்தது.

“கண்ணம்மா உன் எல்லா கேள்விக்கும் நா பதில் சொல்றேன் ஆனா நீ இப்படி இருக்காத உன் உடம்பை கெடுத்துக்காத..என்னை நாலு அடி கூட அடிச்சுரு தாங்கிப்பேன்.ஆனா நீ இப்படி இருக்குறத என்னால பார்க்க முடில டா..ப்ளீஸ்..”

சிறு பிள்ளையாய் முகத்தை துடைத்தவள் தலையை கோதி கொண்டையை போட்டவாறு தலை குனிந்தே அமர்ந்திருந்தாள்.

“நீ அன்னைக்கு பார்த்த பொண்ணு பேரு சீதாலட்சுமி..எனக்கு தங்கச்சி மாதிரி..”

அந்தஒரு பதிலே வெண்பாவை கன்னத்தில் அறைந்தார்போல் இருந்தது.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.