(Reading time: 37 - 74 minutes)

அவளின் மிரட்டலில் நிஜமாகவே பயந்துதான் போனால் ரம்யா பின்னே ஒரு வார சாப்பாடு ஆச்சே.இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் என்னடி ரொம்ப பேசற என் தோழியை பத்திரமாக கூட்டி போக எனக்கு தெரியாதா?அவள்தான் உனக்கு அக்கா இங்கு நடப்பதை பார்த்தால் நீ தான் அவளுக்கு அக்கா போல் இருக்கிறது.

நான் பத்திரமாக கூட்டி போய் வருகிறேன் என்றவளை பார்த்து சிரித்த சுவாதி கோபித்து கொள்ளாதே குண்டூஸ் அவளின் பயந்த சுபாவம் உனக்கு தெரிந்ததுதானே அதான் நான் அக்காவாகிவிட்டேன் என்றாள்.

ரம்யாவும் இவர்கள் பக்கத்து வீடுதான் ஆனால் சுவாதி எப்போதும் கீதா வீட்டில் இருப்பதால் மாலதி அவளுக்கு தோழியானாள்.அது மட்டும் இல்லாமல் இருவரும் பி.ஏ ஹிஸ்டரி எடுத்ததால் இவர்கள் இருவரும் நல்ல தோழியாக இருந்தனர்.

ரம்யா கொஞ்சம் குண்டாக இருப்பாள்.வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் சாப்பிடுவதால்.அது மட்டும் இல்லாமல் அவளின் அம்மா அப்பாவிற்கு வெகு நாட்கள் குழந்தை இல்லாமல் பிறகு பிறந்தவள்.அதனால் அவர்கள் வீட்டில் அவளுக்கு செல்லம் அதிகம் சாப்பிடுவதில் குறை வைப்பதில்லை.அதனால் எப்போதும் சுவாதி அவளை குண்டூஸ் என்று கூப்பிட்டு வெறுப்பேற்றுவாள்.ரம்யாவிற்க்கு அப்படி கூப்பிட்டாள் பிடிக்காது என்று தெரிந்தும்.

அப்புறம் குட்டிமா போறதுதான் போகிறாய் உன்னுடைய இந்த பாச தங்கைக்கு ஒரு சூப்பர் மாப்பிள்ளை பார்த்துவிட்டு வா என்று கூறி கண்ணடிக்க.அவளின் காதை திருகிய மாலு

ஏன்டி நான் என் பிரண்டு கல்யாணத்துக்கு போகிறேனா,இல்லை உனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேனா,போ போய் கிளம்பும் வழியை பார் லேட்டாகி விட்டது நானும் கிளம்புகிறேன் என்று சொல்லி சென்ற தன் அக்காவை பார்த்து கொண்டிருந்தவளின் தலையில் வலிக்காமல் கொட்டினார் லட்சுமி.

 மணி என்ன என்று மேடம் பார்த்தீர்களா என்று கிண்டலாக கேட்க மணியை பார்த்த சுவாதி அதிர்ந்துதான் போனாள்.

பின்னே 8.40 மணிக்கு காலேஜ் பஸ் வந்துவிடும் மணி இப்போதே 8.10 ஆகிவிட்டதே.லட்சுமி திட்ட ஆரம்பிக்கும் முன்

என்ன லட்சு நீ கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கிறதா. நேரம் ஆகிவிட்டதே மகள் காலேஜ் போக வேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.நான் ஒரு ஆளே எவ்வளவு தான் பார்ப்பது என்று கூறி அம்மா எதுவும் சொல்லும் முன் பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைத்து கொண்டவள் அப்போதும் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல்,நின்று வாயை பார்க்காமல் மதிய சாப்பாடு ரெடி பண்ணு லட்சு என்று சத்தமிட.

இவ்வளவு நேரம் வெட்டி அரட்டை அடித்துவிட்டு இப்போது நான் வெட்டி அரட்டை அடிக்குறேனா என்று மகளின் குறும்பை மனதில் ரசித்தாலும் வெளியில் வா உன்னை பேசி கொள்கிறேன் என்று கோபம் போல் காட்டி கிச்சனுக்குள் சென்றவர்.இப்படி வெட்டி அரட்டை அடிக்க வேண்டியது பிறகு நேரமாகி விட்டது என்று சாப்பிடாமல் ஓடுவது இதுவே இவளுக்கு வேலை என்று சலிப்பாக நினைத்தார்.

அவளின் அறைக்கு சென்று ஒரு நோட்டை எடுத்து ஒழிய வைத்தார்.

லட்சுமி நினைத்தது போலே கிளம்பி வந்த சுவாதி நேரமாகி விட்டதால் சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல.அவள் சொல்வதை காதில் வாங்காமல் தட்டில் மூன்று இட்லி வைத்தார் லட்சுமி.தனது பேகில் எல்லாம் எடுத்து வைத்தாகிவிட்டதா என்று பார்த்த சுவாதி ஒரு அசைண்மண்ட் காணமல் அதை தேட ஆரம்பித்தாள்.

அய்யோ சுதி எங்க டி வச்ச இன்னைக்கு அந்த அசைண்மண்ட் சப்மிட் பண்ணல அந்த கொறிலா உன்ன ஒரு வழி பண்ணிடும்.தேடு டி தேடு என்று கூறி கொண்டே தேட ஆரம்பிக்க அவளின் பின்னால் தட்டை எடுத்து கொண்டு அவளுக்கு ஊட்டும் வேலையை பார்த்தார் லட்சுமி.

மூன்று இட்லிகளை சாப்பிட்ட பின்பு லட்சுமி எடுத்து வைத்த அவளின் அசைண்மண்டை காட்டி

இதுவா பார்.மாலு உன்னிடம் கொடுக்க சொன்னால் என்று நீட்ட.அதை வாங்கி பார்த்தவள் அம்மாவை முறைத்து இவ்வளவு நேரம் இதைதான் தேடி கொண்டிருந்தேன் முதலிலேயே சொல்லமாட்டீர்களா என்று கூறி முறைத்தாள்.ஆனால் லட்சுமி எதுவும் நடக்காதது போல் பார்த்து

அதான் இப்போது கொடுத்துவிட்டேனே என்றவர்.

இப்போதாவது பஸ்க்கு கிளம்புவாயா இல்லை என்முகத்தையே பார்த்து கொண்டு இருக்க போகிறாயா என்று கூலாக கேட்க.

நேரம் பார்த்து காலை வாருகிறாய் லட்சு வர வர உனக்கு லொள்ளு அதிகமாகிவிட்டது வேறு ஒன்றும் இல்லை.உன்னை ஈவ்னிங் வந்து பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி வெளியில் வந்தவள் தெருமுனையில் காலேஜ் பஸ்ஸில் எல்லோரும் ஏறி கொண்டிருப்பதை பார்த்து வேகமாக ஓடி போய் பஸ்ஸில் அப்பாடா...... என்று அமர்ந்தவளை முறைத்தாள் அவளின் இன்னொரு தோழி அஞ்சு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.