(Reading time: 36 - 72 minutes)

அவர் சொல்வதை கேட்ட அர்ஜூனுக்கு முதலில் தோன்றிய எண்ணம் என் வதுக்கு திருமணமா என்பதுதான்.லட்சுமி இருக்கும் அறைக்கு சென்றான்.கிளிந்த நாறாக ஒரு உருவம் கட்டிலில் படுத்து இருக்கிறதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்த லட்சுமியை செக் செய்ய போனான்.ஆனால் லட்சுமி வேண்டாம் என்பது போல் கண்களால் கெஞ்சி இன்னும் நான் இருந்து என்ன செய்ய போகிறேன்.

என் உயிரை வைத்து என் மகளை நாசம் செய்ய பார்க்கிறார்கள்.நான் சாகிறேன் எனக்கு எந்த மாத்திரையும் வேண்டாம்,எந்த மருந்தும் வேண்டாம் என்று ஈன சுவரத்தில் பேச முடியாமல் பேசினார்.இது பேசியதே அதிகம் என்பது போல் அவருக்கு மூச்சு வாங்கியது.

லட்சும் இவ்வாறு சொன்னது சுவாதியிடம் சொன்னாள் அவளது அம்மாவை பார்த்து கொள்ள வைத்திருக்கும் வேலைகார பெண்.அம்மா சொன்ன விஷயத்தை கேட்ட சுவாதி வேகமாக லட்சுமி இருக்கும் அறைக்கு சென்றாள்.

லட்சுமி படுத்திருக்க அவரிடம் சென்ற சுதி ஏன் மா.நீ மட்டும் போக வேண்டும் என்று நினைக்கிறாய் நீ இப்போது செக் செய்ய விடவில்லை என்றால் வா இருவரும் சாகலாம்.எனக்கு அது சம்மதமே.உங்களை எல்லாம் இழந்து அனாதையாக இந்த உலகத்தில் நான் வாழ்வதற்கு நானும் உங்களுடனே வந்துவிடுகிறேன் அனைவரும் சேர்ந்தே இருப்போம் என்று அமைதியாக அதே சமயம் அழுத்தமாக கூறினாள் சுதி லட்சுமி அமைதியானார்.

சுவாதியின் ஒவ்வொரு சொல்லும் அர்ஜூனுக்கு அதிக வலியை தந்தது.ஆனால் அது எதனால் என்று யோசிக்க பிடிக்காமல்,சுவாதியிடம் மெதுவாக போலிஸ் கம்ப்ளெய்ண்ட் பற்றி பேசினான்.இவர்கள் பேசுவதை கேட்ட லட்சுமி என் ஒரு மகளாவது எனக்கு வேண்டும் அவர்களுக்கு தெரிந்தாள் என் மகளை கொல்லவும் தயங்கமாட்டார்கள் என்று தடை கூறினார்.

சுவாதி என்ன சொல்கிறாள் என்று அவள் முகம் பார்க்க அவள் பிறகு பேசலாம் என்று சைகையில் கூறி சென்றாள்.

அன்று மாலை நேரத்தில் அர்ஜூன் காற்றாட நடந்து வரலாம் என்று நடக்க ஆரம்பித்தான்.எதிரில் ஒரு சேலை வியாபாரி வருவதை பார்த்தவனுக்கு நேற்று நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்தது.ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை அந்த மாமியே கட்டி கொள் என்று நான் வாங்கி வந்த சேலையை தருகிறார்கள் இவளுக்கு என்ன வாங்கி கட்டி கொள்ள வேண்டியது தானே,என்று திட்டி கொண்டே நடந்தான்.

அவன் வருவதற்கு எதிர் புறத்தில் வந்த சுவாதி காலையில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று கேட்டாள்.அர்ஜூன் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக கூறி,நாம் நாளை சென்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு வந்து விடலாம்.என் மாமாக்கு தெரிந்தவர்தான் டி.ஐ.ஜி.அவர் மூலமாக பிரஸர் கொடுத்தால் சீக்கிரம் வேலையாகும் என்று அந்த வெட்டவெளியை வெறித்து கொண்டு சொன்னான்.

ராஜாவையும் உடன் அழைத்து செல்லலாம்.உதவியாக இருக்கும் என்று சொல்லிவிட்டு.ராமிற்கு இப்போதைக்கு இந்த விஷயம் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவளை எச்சரித்து அனுப்பினான்.

சுவாதி அர்ஜூனிடம் தலையாட்டினாலும்,மாலதி விஷயம் தெரிந்ததில் இருந்து விலகி செல்லும் அவன் குணத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

சுவாதியை எச்சரித்த அர்ஜூன் அறியவில்லை அவள் மூலமாக இல்லை என்றாலும் ராமிற்கு விஷயம் தெரிந்து.அவனால் சுவாதி மரணத்தின் வாசல் வரை செல்ல போவதையும்.சுவாதியை விட்டு விலகி இருக்க வேண்டும் ராமிற்கு தண்டனை வாங்கி கொடுத்த பிறகு இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று நினைத்த அர்ஜூன் எந்த அளவுக்கு தான் சுவாதியை காதலிக்கிறோம் என்றும்.தன் மனதில் இருந்த குழப்பம் நீங்கி உண்மையான காதலை அறிந்து கொண்டபின் அவன் பட போகும் நரக வேதனை பற்றி அறியாமல்இருவரும் அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்தனர்.

காலையில் எழுந்த சுவாதிக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. இருக்காதா பின்னே தன் அக்காவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க போகிறதே.வேகவேகமாக கிளம்பியவள் தன் தோழியை பார்த்து வருவதாக தாயிடம் பொய் உரைத்துவிட்டு,மனதில் இந்த முறை என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா நம்முடைய குடும்பத்தை அழித்தவனுக்கு தண்டனை வாங்கி தராமல் நான் ஓய போவது இல்லை.

மாலதிக்கு நான் கொடுத்த சத்தியத்தை நிறை வேற்ற என் உயிரையும் தருவேன் என்று மனதுக்குள் சொல்லி கொண்டுபுறப்பட்டாள்.அவர்கள் இருவரும் பேசி வைத்தது போல் ஊருக்கு வெளியே சென்று காரில் காத்திருந்த அர்ஜூனுடன் இணைந்து கொண்டாள்.கார் பயணத்தின் போது போகும் போதும் சரி வரும் போதும் சரி இருவரும் பேசி கொள்ளவில்லை.

அர்ஜூன் மட்டும் கண்ணாடி வழியாக அவளை பார்த்து கொண்டு வந்தவன் மனதில் பெரும் சுமை.உன்னைவிட்டு என்னால் பிரியவும் முடியவில்லை,சேரவும் முடியவில்லை. உன்னை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது என்று மனதுக்குள் பேசி கொண்டான்.

 இருவரும் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு வீடு வர மாலை ஆறு மணி ஆகிவிட்டது.காரைவிட்டு இறங்கும் போதும் அவள் ராஜாவை பார்த்தே நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.அவளை பொறுத்த வரை அர்ஜூன் அக்கா காதலித்தவன் என்ற எண்ணத்தை ஆழமாக அவள் மனதில் பதிய வைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.