அதுவரை அலட்டிக்கொள்ளாமல் இருந்த பாரதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.. கால்கள் பின்னிக்கொள்ள அந்த அகிலாவே அவளை அழைத்து கொண்டு அவனுக்கு அருகில் சென்று அவளுக்கு அமர உதவி செய்தாள்..
ஒருவித பயம் மற்றும் படபடப்புடன் அவன் அருகில் கொஞ்சம் இடைவெளி விட்டே அமர்ந்தாள் பாரதி..
சிறிது நேரம் ஐயர் இருவருக்கும் சில சடங்குளை செய்ய வைத்தார்..
பாரதி அவனை ஓரக்கண்ணால் பார்க்க அவனோ இவள் பக்கம் திரும்பவே இல்லை.. முகத்தில் அதே கடுகடுப்புடன், உடல் விரைத்து இருந்தான்.. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உதட்டில் ஒரு போலியான புன்னகையுடன் இருந்தான்...
அவன் மன நிலை அருகில் அமர்ந்திருந்த பாரதிக்கு நன்றாக புரிந்தது... அதை கண்டு அவள் இன்னும் பயந்தாள்... பின் அவளும் தன் உணர்ச்சிகளை கட்டு படுத்தி கொண்டு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ி வாங்கிற மாதிரி பண்ணிட்டியே முருகா...” என்று புலம்பினாள் மனதுக்குள் பாரதி..
ஜானகி எதேச்சையாக பாரதியின் முகத்தை காண, அவள் முகத்தில் இன்னும் ஒரு கலக்கமும் வேதனையும் ஏதோ தப்பு பண்ற மாதிரியும் இருந்தது.. அதற்கான காரணத்தை புரிந்து கொண்டவர் உடனே தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்...