“ஹ்ம்ம்ம் அவர் எப்பவும் என் கூடத்தான் இருக்கார் சுசி.. இப்பவும் அவர் பையன் கல்யாணத்தை கண் குளிர பார்த்துக் கொண்டிருக்கார்..” என்று சிரித்தார் ஜானகி கண்களில் ஆனந்த கண்ணீருடன்...
ஆதிக்குமே தன் அன்னையின் அந்த திடீர் செயல் நம்ப முடியாததாக இருந்தது ...
அதற்குள் அகிலா எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கி திரும்பி வந்து அந்த தட்டை ஐயரிடம் கொடுத்தாள்.. அதை வாங்கிய ஐயர் , நாத்தனார் முடிச்சு யார் போடறது என்கவும்
“நான்தான்... நான் தான்..” என்று துள்ளி குதித்தாள் அகிலா...
அதை கண்ட சிவகாமி
“ஹே... பறக்காத டீ..உனக்குத் தான் அந்த ஷான்ஷ்.. “ என்று சிரித்தவர்
“ஜானகி, நீ இந்த வாலிடம் நாத்தனார் முடிச்சு அவதான் போடணும்னு சொன்ன நாள் ல இருந்து இவ கால் தரையில நிக்கல... நாத்தனார் முடிச
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவர்களின் ஜோடி பொருத்தத்தை கண்டு மகிழ்ந்தனர்.. ஜானகியும் சுசிலாவும் மகிழ்ச்சியில் திலைத்தனர்.. இப்படி ஒரு நாள் தங்கள் மகனின் வாழ்வில் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையே இல்லாமல் இருந்த அந்த இரண்டு தாய்களுக்கும் மீண்டும் தங்கள் மகனை மணக்கோலத்தில் காணவும் மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்....