அருகில் நின்ற சிவகாமியும் அவர்களையே ரசித்துக் கொண்டிருந்தார்... அதை தொடர்ந்து அவரின் பார்வை அருகில் மாப்பிள்ளை தோழனாக நின்று கொண்டிருந்த நிகிலனிடம் சென்றது. அவனும் பட்டு வேஷ்டி சட்டையில் ஆதியை விட சற்று உயரம் அதிகமாக மிலிட்டரி கட்டுடன் கம்பீரமாக நிக்கும் அவனையே ரசித்தார்...
அவரின் கண்களில் ஏதோ ஒரு ஏக்க பார்வை இருந்தது அவனை காண்கையில்... நிகிலனும் அவரை பார்க்க அவரின் கண்களில் தெரிந்த அந்த ஏக்கத்தை, ஆசையை கண்டவன் அவரை பார்த்து முறைக்க, அதை கண்டு சிவகாமி அவசரமாக தன் பார்வைய மாற்றிக் கொண்டார்... பின் மணமக்களையே ரசிக்க ஆரம்பித்தார்...
அடுத்து பாத பூஜை செய்ய என்று மாப்பிள்ளை, பெண் இருவரின் பெற்றொரை வரச் சொல்ல, ஜானகி தயங்கி நின்றார்...
ஆதி அவர்களை பார்த்து,
“ஜானகிமா. சுசிலா மா , இரண்டு பே
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணத்தை விட உன் திருமணத்திலதான் அதுவும் இப்படி எங்களை வணங்கியதுல , உனக்கு பெற்றோரா இப்படி நின்னதில ரொம்ப பெருமையா இருக்கு
நீ எப்பவும் சந்தோஷமா மாப்பிள்ளையை அனுசரித்து இருக்கனும்.. “ என்று அவளின தலையை தடவி ஆசிர்வாதம் பண்ணினார்.. கண்ணனும் சிரித்து கொண்டே அவளை ஆசிர்வாதம் பண்ணினார்...