வழக்கமான நல விசாரிப்புகள் பிறகு ஜானகியின் குரலில் இருந்த உற்சாகத்தை கண்டு பாரதி
“என்ன அத்தை ஷ்பெஷல்.. .இன்னைக்கு நீங்க இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?? “என்றாள்
“ஹ்ம்ம்ம் பரவாயில்லையே என் மறுமகள் புத்திசாலி... என் குரலில் இருந்தே கண்டு பிடிச்சுட்டியே.. நல்ல செய்திதான் பாரதி... நீ சீக்கிரமே என் மறுமகளாக போற.. “என்றார் ஜானகி உற்சாகத்தில்..
“இதுல என்ன இருக்கு அத்தை.. நான் இப்பவும் உங்க மறுமக தான.. ?” என்றாள் புரியாதவளாக...
“ஹ்ம்ம்ம் இப்பதான் என் மறுமக புத்திசாலினு சொன்னேன்.. அதுக்குள்ள அது தப்புனு ப்ரூப் பண்றியே மறுமகளே.. “என்று சிரித்தார்..
“”ம்ஹூம்.. நீங்க ஏதோ சரியில்லை இன்னைக்கு... ஒன்னும் புரியற மாதிரி பேச மாட்டேங்குறீங்க... ஜானகி அத்தை மறுமக அவங்க அத்தை மாதிரியே மக்குதான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்பியிருந்தவருக்கு பாரதி மறுத்ததும் ஷாக் ஆகி நின்றார்... பின் மெல்ல சுதாரித்து
“என்னாச்சு பாரதி?? .. ஏன் வேண்டாங்கிற?? உனக்கு ஆதியை பிடிக்கலையா?? .. இல்ல உன் வீட்ல எதுவும் சொல்வாங்கனு பயமா?? நான் அண்ணனை சமாளிச்சுக்குவேன்... நீ எதை பத்தியும் கவலைப்படாத... “ என்றார் கரைந்த குரலில்..