“அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை... எனக்கு இந்த ஏற்பாட்டில் விருப்பம் இல்லை.. என்னை மன்னிச்சிடுங்க.. இதுக்கு மேல இத பத்தி பேச வேண்டாமே... இதோடு இந்த பேச்சை விட்டுடுங்க.. உங்க பையனுக்கு வேற ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க..இப்ப எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அப்புறம் போன் பண்றேன்.. “ என்று அவரின் பதிலுக்கு கூட காத்திராமல் போனை வைத்தாள் பாரதி...
அவரிடம் இன்னும் சில விநாடிகள் பேசினால் போதும் தன்னையும் அறியாமல் சரி சொல்லி விடுவாள் என்று தெரிந்தே மேல பேசாமல் துண்டித்தாள்..
ஆனாலும் அலைபேசியை வைத்தவளுக்கு மனம் கனத்து இருந்தது.. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது... எதுக்காக இந்த கண்ணிர் என்று அறியாமலயே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..
சிறிது நேரம் அப்படியே அந்த தோட்டத்தில
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது...
“இந்நேரம் என்ன பண்ணுவாங்க அத்தை?? .. பாவம் அழுதுகிட்டு இருப்பாங்களோ?? அவங்களுக்கும் கஷ்டமாதான் இருக்கும்.. ஏன் எனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே.. ஒரு வேளை நான் எடுத்த முடிவு தப்போ?? என்று வழக்கம் போல பட்டிமன்றம் நடத்தினாள் அன்று நாள் முழுவதும்..