“என்ன டாக்டர்?? .. இங்க வந்துகூட உங்க ஷ்டெதஷையும் அந்த மருத்து மாத்திரையும் பற்றிதான் பேசணுமா?? .. இன்னைக்கு ஒரு நாள் அதுங்களுக்கு லீவ் விடுங்க... பாவம் அதுங்களும் உங்க கிட்ட மாட்டி கிட்டு முழிக்கிதுங்க... “ என்று சுசிலாவை பார்த்து சிரித்தாள் பாரதி....
“ஹா ஹா ஹா.. “ .என்று சிரித்த சுசிலா
“ஹே வாயாடி... என்ன?? நான் உனக்கு இன்னும் டாக்டரா?? ...இனிமேல் நான் உனக்கு மாமியாரக்கும்.. அதுவும் கொடுமைக்கார மாமியார்... மத்தவங்களுக்கெல்லாம் ஒரு மாமியார் னா உனக்கு நாங்க ரெண்டு மாமியார் தெரிஞ்சுக்கோ...
நீ ஜானகியை ஐஷ் வச்சு ஏமாத்திடலாம்... ஆனால் என்கிட்ட வாலாட்ட முடியாது.. ஜாக்கிரதையா இருந்துக்க... “ என்று மிரட்டினார்.. இல்லை மிரட்டுவதை போல நடித்தார் தன் சிரிப்பை அடக்கிகொண்டு முகத்தை சீரியஷாக வைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
து... அவர்களை பார்த்து சிரித்து கொண்டெ வெளியில் நடந்தான்.. மறந்தும் பாரதியின் பக்கம் திரும்பவில்லை அவன்..
வெளியில் சென்றவன் கண்ணனிடம் சென்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்,, அவர் மட்டும் தனியாக இருப்பதை மேல மாடியில் இருந்து பார்த்தவன் அவருக்கு கம்பெனி கொடுக்கவே கீழ இறங்கி வந்தான்..