“அம்மா இப்பலாம் ரொம்ப சார்ப் ஆயிட்டாங்க.. அவங்க முன்னாடி நீ என் மனைவியா நடிக்கணும்.. அவங்களுக்கு எந்த சந்தேகமும் வந்திடக்கூடாது.. என்ன புரிஞ்சுதா?? “ என்றான்..அதை கேட்டு முகம் வாடிய பாரதி
“அடப்பாவி.. கட்டின பொண்டாட்டி கிட்டயே பொண்டாட்டியா நடிக்க சொல்லி கேட்குற புருசன் உலகத்துல நீ ஒருத்தன் மட்டும் தான்.. “ என்று தலையில் அடித்துக் கொண்டாள் மானசீகமாக...
அவன் சொன்னதுக்கு சரியென்று தலையை ஆட்டினாள்.. .அவள் தலைய ஆட்டும் பொழுது அவள் காதில் அணிந்திருந்த சிமிக்கியும் அளுடன் அசைந்தாடியது... அதை ரசித்தவன் பார்வை மீண்டும் அவள் வயிற்றுக்கு தாவ, அவன் பிரின்ஷஷை தொட்டு பார்க்க துடித்தன அவன் கைகள்..
“சே! இந்த கருவாச்சி படுத்தினதுல இந்த நான்கு நாட்களும் என் பிரின்ஷஷ் கூட பேச முடியாமல் போயிருச்சே... அதுக்கெல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் ஏதோ நினைவு வந்தவளாக,
“சுசி அத்தை.. நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே.. “ என்று பீடிகை போட்டாள் பாரதி..
“அதெல்லாம் இல்ல டா.. கேளு என்ன னு “ என்று சிரித்தார் சுசிலா
“வந்து... நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?? ஏதாவது லவ் பெய்லியரா?? “ என்றாள் தயங்கியவாறு..