(Reading time: 59 - 118 minutes)

கீதா,நகுலன்பற்றிய அனைத்து விஷயங்களையும் சொன்னவன் முதல் நாள் இரவு அவர்களுக்குள் நடந்த உரையாடலையும்,அதன் பிறகு நகுலனின் புலம்பலையும் சொல்லி முடித்தவன்.நம்மை சேர்ப்பதற்காக அவர்கள் செய்த வேலை இது.இவர்களுக்குள் விருப்பம் இல்லை என்றாலே நாம் ஏதாவது செய்து சேர்த்து வைக்கதான் பார்ப்போம்.இப்போது விருப்பம் இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பின் அவர்களை பிரியவிட கூடாது.

கீதாவைபற்றி உனக்குதான் நன்றாக தெரியும் இந்த விஷயத்தில் நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

இல்லை அஜூ இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. சுதி.

என்ன வது இப்படி சொல்கிறாய். அஜூ.

ஆமாம் அஜூ இவர்கள் விஷயத்தில் எனக்கு புரிந்தவரை இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி கொண்டாலே பிரச்சனை இருக்காது.அது மட்டும் இல்லாமல் இருவரும் மற்றொருவரை காதலிப்பதாக ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் எப்படி நாம் ஒன்றாக இருந்தாள் பிரச்சனை குறையும் என்று நினைத்து இருவரையும் அருகருகில் இருக்க வைத்தார்களோ நாமும் அது போல் அவர்களுக்கான தனிமையை கொடுக்க வேண்டும்.

இப்போது அவர்கள் தனியாகதானே இருக்கிறார்கள்.

இல்லை அஜூ எனக்கு இந்த சந்தேகம் முதலிலேயே வந்தது. நகுல் ரூமில் இருக்கும் போது இவள் அறை பக்கமே போக மாட்டாள்.இரவும் அபியுடன் விளையாண்டு கொண்டு ஹாலிலேயே டிவி பார்த்து கொண்டு லேட்டாகதான் தூங்க அவள் அறைக்கே செல்வாள்.ஆனாலும் நகுலனுக்கு பிடிக்கும் என்று மீன் சமைத்து கற்று கொண்டு சமைத்தாள்.

அவருக்கு பிடிக்கும் என்று வாரத்தில் இரண்டு நாட்கள் புடவை கட்டினாள்.உங்களுக்கு தெரியுமா அஜூ கீதுவுக்கு புடவை கட்டவே பிடிக்காது அதனால் புடவை கட்ட பழகவே இல்லை.என்றாவது கோவில் விஷேஷத்திற்கு அவளை புடவை கட்ட வைக்க நானும் அம்மாவும் ரொம்ப கெஞ்ச வேண்டும் அப்போதுதான் கட்டுவாள்.அப்படிபட்டவள் நகுலுக்காக புடவை கட்டுகிறாள் என்றால் அவளுக்குள்ளும் காதல் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.அதனால்தான் நானும் சரி கணவன் மனைவி ஊடல் போலும் சீக்கிரம் சரியாகிவிடும் என்று நினைத்து பேசாமல் இருந்தேன்.ஆனால் இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகும் என்று நான் நினைக்கவே இல்லை.

கீதாவும் நகுலனை விரும்புகிறாள்.ஆனாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக விலக நினைக்கிறாள் என்று நினைக்கிறேன். அனேகமாக அந்த காரணம் உங்கள் தம்பி காதலிப்பதாக அவளிடம் சொன்ன லட்டுவாக கூட இருக்கலாம். இவர்கள் சேருவதற்கான ஒரே வழி கீதா அமெரிக்கா போவதுதான்.

ஹேய் வது என்ன சொல்ற அவ அமெரிக்கா போனா இங்க என் தம்பிக்கு பைத்தியம் பிடிச்சுடும். அஜூ.

நல்லா பிடிக்கட்டும்.அப்பதான் யாரு முதலில் சொல்வது என்று உங்கள் தம்பிக்கு இருக்கும் ஈகோ குறையும்.கீதா நகுலனின் காதல் ஜெயிக்க வேண்டும் என்றுதான் இப்படி செய்கிறாள் என்று நினைக்கிறேன்.இந்த பிரிவு அவளுக்கும் காதலின் பிரிவை புரிய வைக்கும் என்றாள் குரல் கம்ம.

என்னாச்சு வது?

எங்கள் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை பாத்தீங்களா அஜூ.

சுதி

என்ன ஒற்றுமை?

நாங்க ரெண்டு பேருமே நாங்க காதலிச்சவங்க அவங்க காதலிச்சவங்களோட சேரனும்னு நெனைக்கறோம். சுதி.

ரொம்ப நல்ல ஒற்றுமை.ரெண்டு பேருமே நீங்க செய்யறதுதான் சரினு நெனைக்கற குணம்.மத்தவங்களபத்தியும் அவங்களோட பீலிங்ஸபத்தியும் நினைக்காமா தனக்குதான் எல்லாம் தெரியுனு நெனைக்கற குணம் என்று இத்தனை நாட்கள் மனதில் இருந்த ஆற்றாமை வார்தைகளாக வெளி வந்தது.

இல்ல அஜூ.அது அப்படி இல்ல.உங்கள பிரிஞ்சி வர்ரது எனக்கும் கஷ்டமாதான் இருந்துச்சு.ஆன எனக்கு வேற வழி தெரியவில்லை.நீங்க எவ்வளவு கஷ்டபட்டிங்களோ அதவிட அதிகமா நா கஷ்டபட்டேன்.

அபி வயிற்றில் இருக்கும் போது உங்களோட தோள் சாயனும்.அவனோட மூவ்மண்ட்ட உங்ககிட்ட சொல்லனுனு எவ்வளவு ஆச இருக்கும் தெரியுமா,ஆனா அக்காவோட காதலனாச்சேனு அப்ப எல்லாம் என்ன நானே திட்டிக்குவேன்.

ஒவ்வொரு முறை கீதா என்ன அழகா இருக்கடினு சொல்லும் போதும் இந்த அழகு அவனுக்கு பிடிக்கவில்லையே என்ற ஏக்கம்தான் வரும் ஏன் என்னை அவனுக்கு பிடிக்கவில்லை என்ற கேள்வியை எனக்கு நானே பலமுறை கேட்டுக்குவேன் என்றவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

கீதா,வள்ளிமா,ராகவ் அப்பா இல்லனா நா இல்ல அஜூ. எவ்வளவு அக்கறையா பாத்துக்கிட்டாங்க தெரியுமா. அவங்களோட இன்னோரு பொண்ணுனுதா எல்லாரும் அங்க நெனச்சுக்கிட்டு இருந்தாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.