அது பொய்.உங்க தம்பிய காலைல ஏர்போர்ட்ல நான் பார்த்தேன்.கீதாவையேதான் பார்த்துகிட்டு இருந்தாரு.
அட பாவி இன்னைக்கே வந்துட்டானா?நீ பாத்தியா?ஏன் என்கிட்ட சொல்லல.
உங்க தம்பியே தான் வந்தது தெரிய கூடாதுனுதா ஒழிஞ்சு ஒழிஞ்சு கீதுவ பாத்துக்கிட்டு இருந்தாரு.அவள்தான் காதலை முதலில் சொல்ல வேண்டும் என்று அவர் பிடிவாதமா இருக்காரு இதுக்கு நாமதான் ஏதாவது பண்ணணும்.
நானும் இத தான் முதல்ல சொன்னேன் நீதான் அவங்களாதான் சேரணும்னு சொன்ன.
இது மட்டும் நியாபகம் இருக்கும்.அவங்களுக்கு தேவையான தனிமைய தரணும்னு சொன்னேன்ல அது நியாபகம் இருக்காதே.
அவன்தான் டெல்லி போறேன்,மீட்டிங் போறேனு நடு இராத்திரி வர்ரான்.இதுல ரெண்டு பேரும் ஒரே ரூம்லதானே இருக்காங்க என்ன தனிமைய நாம உருவாக்குறது.
நீங்க சொல்றதும் சரிதான்.ஆனா அப்ப அவருக்கு இல்லாத ஒரு உணர்வ நாம இப்ப வர வைக்க போறோம்.
என்னடி சொல்ற.எனக்கு ஒண்ணும் புரியல.
ம்..பொறாமை. சுதி.
பொறாமையா?யாருக்கு?யாரு மேல?
உங்க தம்பிக்கு வர வைக்க வேண்டிய உணர்வு.நம்மோடது எங்கயும் போகாதுனுதான் கேர்லஸா இருக்காரு.இன்னோரு ஆளு போட்டிக்கு வந்தா,அப்ப என்ன பண்ணுவாரு.தன்னால போய் பேசுவாறுல.
செல்ல குட்டி செம்ம அறிவுடி உனக்கு.அவன பொறாம பட வைக்கறது இருக்கட்டும்.முதல்ல நம்ம திட்டத்துக்கு கீதா ஒத்துக்கனுமே.
அவ எதுக்கு ஒத்துக்கணும்.
அவ சொன்னாதானே அவன் நம்புவான்.
நாம சொன்னாக்கூட நம்புவாரு.
ஐயோ.....எனக்கு மண்டைய பிச்சுக்கணும் போல இருக்கு தயவு செஞ்சு புரியர மாதிரி சொல்றீயா?
இதுக்குதான் அவசரபட கூடாது.நான் சொல்றதுக்குள்ள என்ன அவசரம்.கீதுகிட்ட பேசிட்டுதான் இப்ப வர்றேன்.அங்கு என்று ஆரம்பித்தவள் கீதா சொன்ன அனைத்தையும் சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாம நமக்கு உதவ போறதே இந்த மித்ரன்தான்.
மூன்று வயசு பையன் நமக்கு என்ன உதவி செய்ய போறான்.
மித்ரன் மூன்று வயசு பையன்னு நமக்கு மட்டும்தானே தெரியும்.உங்க தம்பிக்கு தெரியாதே.
சூப்பர்டி பட்டு குட்டி அப்புறம்.
ரொம்ப நாள் ஆக்ககூடாது அஜூ.உடனே ஆரம்பிக்கனும் அனேகமா ஒரு வாரம்தான் உங்க தம்பிக்கு நான் வச்சிருக்கற கெடு.அதுக்குள்ள ஈகோவ விட்டு அவரு பொண்டாட்டிய தேடி போறாறானு பாக்கலாம்.
ஒரு வாரமே அவனுக்கு அதிகம்னுதான் நான் நெனைக்கறேன்.அவன் அவனோட பொண்டாட்டிய தேடி போறது இருக்கட்டும் நான் இப்ப என்னோட பொண்டாட்டிகிட்ட வரலாமா?
சாரி அஜூ.இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தது எனக்கு டையர்டா இருக்கு.தூக்கம் வேறு வருகிறது என்று ஒரு கொட்டாவியை விட்டாள்.
வதுமா.நீ என்ன சொல்லுவனு தெரிஞ்சும் இந்த கேள்வி கேட்டேன்ல என்னை சொல்லனும் நான் உன்னிடம் பர்மிசன் கேட்க வேண்டிய அவசியம் இல்ல மேடம்.எனக்கு லைசன்ஸ் இருக்கு என்று அவளது முந்தானையை விலக்கி தாலி கொடியை அவள்முன் ஆட்டி காட்டியவன் கணவனாக தன்னுடைய வேலையை ஆரம்பித்தான்.
மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு நகுலன் வரவிற்கு காத்திருந்தாள்.சுதியை அன்று முழுதும் காக்க வைத்தவன் இரவுதான் வந்தான்.
இரவு உணவு அனைவருடனும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.நகுலும்,அஜூவும் நியூஸ் பார்த்து கொண்டு இருந்ததை கவனித்த சுதி இதுதான் சமயம் என்று உணர்ந்து தன் கணவனிடம் சொல்வது போல் நகுலனை ஓரகண்ணால் பார்த்து கொண்டே பேசலானாள்.
இந்த கீது பாருங்க போன உடனே பிரண்டு புடிச்சுட்டா.
கீதாவ ஏர்போர்ட்ல இருந்து கூட்டிட்டு போன லாராவால இண்டிரிடியூஸ் ஆனவராம்.ரொம்ப நல்லா பழகராராம். அவருக்கூட பேசுனா டைம் போறதே தெரியலனு சொல்றாங்க. அப்புறம் மேடம் நேத்து புல்லா அவருக்கூடதா ஷாப்பிங் போனாளாம்.
ஒரு நாள் புல்லா போனதே தெரியலனு சொல்றா. பரவால்ல நம்ம எல்லாம் விட்டுட்டு எப்புடி இருப்பாளோனு கவலைல இருந்தேன் இனி அந்த கவலை தேவையில்லனு நெனைக்க...... தம்பி எங்க போறீங்க உங்க வைப்ப பத்திதான் பேசிகிட்டு இருக்கேன்.
இல்ல அண்ணி நான் அவக்கூட பேசிட்டேன் என்றவன் விறுவிறுவென தன் அறைக்கு சென்றுவிட்டான்.
என்ன சுதி இப்புடி வெறுப்பேத்திட்ட பாவம் அவன் முகமே ஒரு மாதிரி ஆகிடுச்சு.