(Reading time: 22 - 43 minutes)

நோ ப்ராப்ளம் மது..ஹவ் அ குட் டே..நா போய்ட்டு ரெடி ஆய்ட்டு வரேன்..”,என்றவன் குளிக்கச் செல்ல மதுவுக்குமே ஓரளவு அவனின் நிலை புரிந்தது.இரவு இருந்த கடின நிலை மறைந்து சற்றே இலகுவாய் உணர்ந்தாள்.

கிட்சனிற்குச் சென்று கணவனுக்கும் தனக்குமாய் காபி வாங்கச் சென்றவளை அத்தையும் அக்கா முறை பெண்கள் இருவரும் பிடித்து வைத்துக் கொண்டு என்னெனன்னவோ கேட்க ஆரம்பிக்க அவளுக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

ஐயோ அத்தை இதெல்லாமா கேட்டுட்டு இருப்பாங்க..கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம..”

அடிப் போடி இதெல்லாம் தாண்டி வந்தவங்க தான் நாங்களும்..ரொம்பதான் சலிச்சுக்குற..”,என மேலும் அவளை ஒரு வழியாக்கி விட்டுத்தான் நகர்ந்தனர்.

அதற்குள் கிடைத்த தனிமையில் தாயிடம் எரிந்து விழுந்தாள்,”ம்மா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என்ன இதை பத்தியெல்லாம் பேசுறாங்க..கல்யாணம் பண்ணா அடுத்து புள்ள தானா எங்க பெர்சனல் இல்லையா அது..”

மது கத்தி பேசாத காதுல விழுந்துற போகுது..இதெல்லாம் சாதாரண விஷயம் தான் எங்க காலத்துல எல்லாம் இன்னுமே மோசம்..போ போய் மாப்பிள்ளைக்கு காபி குடு..மண்டபத்துக்கு கிளம்பணும் ரெண்டு பேரும் சீக்கிரம் தயாராகி வாங்க..”

ம்ம்”,என வாய்க்குள்ளேயே முனகியவள் இருவருக்குமான காபியை எடுத்துக் கொண்டு சென்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதன் பின் சிறு சிறு சீண்டல்களில் தொடங்கிய அவர்களின் உரையாடல் மதுவை ஓரளவு சாதாரணமாக்கி இருந்தது.அதன்பின் மறுவீடு முடிந்து மணமக்களை ஸ்ரீகாந்த் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வருவதற்காக கிளம்பினர்.

அத்தனை நேரம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திவளுக்கு வைரவனும் மரகதமும் கிளம்பத் தயாரான நேரம் அழுகையை அடக்க முடியாமல் போனது.வைரவனுமே சற்று கலங்கித்தான் போனார்.பின் அனைவருமாய் ஓரளவு அவர்களை சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.

இன்றும் நாளையும் இங்கிருந்துவிட்டு நாளை இரவு இரயிலில் ஸ்ரீகாந்தின் பெற்றோரோடு ஊருக்குச் செல்வதாய் ஏற்பாடு அங்கு சிறிதாய் ஒரு ரிசெப்ஷன் இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்று முழுவதும் ஸ்ரீகாந்தின் தங்கை அவளோடு கதை பேசியபடி அவளின் பொருட்களை அடுக்கி வைக்க உதவிக் கொண்டிருந்தாள். மதுவிற்கு மனம் மொத்தமும் பெற்றவர்களிடம் இருந்தாலும் ஓரளவு தன்னை சமாளித்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

அதிலிருந்த ஒரு சுடிதார் மெட்டிரியலை கையில் எடுத்த அவனின் தங்கை அவளிடம்,

வாவ் அண்ணி இது ரொம்ப நல்லாயிருக்கே எங்க வாங்கினீங்க?”

இதுவா அப்பா வேலை விஷயமா போயிருந்தப்போ மும்பைல வாங்கிட்டு வந்தாரு.எனக்கு ரொம்ப பிடிச்ச ட்ரெஸ் அதனாலேயே ஸ்ட்ரிச் பண்ணாம வச்சுருக்கேன்..”

..எனக்கும் ரொம்ப பிடிச்சுருக்கு இதை நா எடுத்துக்கவா?”

இதுவா இல்ல டா இது எனக்கு க்ளோஸ் டு ஹார்ட்..இன்னும் ரெண்டு மூணு மெட்டிரியல் இருக்கு பாரு அதுல எதாவது ஒண்ணு எடுத்துக்கோ..”

அவள் காட்டிய மற்றதையும் பார்த்தவளின் பார்வை மீண்டும் அதே சுடிதாரில் நிலைத்து நிற்க அதை கொடுக்க மனமில்லாதவளாய் விலையுயர்ந்த ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்து வைத்துக் கொள்ளுமாறு கூறினாள்.

அமைதியாய் அதை வாங்கிக் கொண்டவள் தன் தாயிடம் என்ன கூறினாளோ சற்று நேரத்தில் அந்த சுடிதாரோடு வந்தவர் அவளிடம் கொடுத்துவிட்டு,

அந்த கழுதைக்கு அறிவேயில்ல மா..எத்தனை வாங்கிக் கொடுத்தாலும் ஆசை அடங்காது.என்னவோ இதுதான் உலகத்துலயே பெருசு மாதிரி வாங்கிட்டு வந்துருக்கா பாரு..இந்தா மா நீ வச்சுக்க..”

ஐயோ அத்தை இதுல என்ன இருக்கு சின்ன பொண்ணு தான வச்சுக்கட்டும் கொடுங்க..”

அதெல்லாம் வேணாம் எப்பவும் நினைச்சதெல்லாம் கிடைக்காதுனு புரியட்டும்..இந்தா நீ இதை உள்ளே வச்சுட்டு சாப்ட வா..”,என்றவர் விறுவிறுவென சென்றுவிட மொத்தமாய் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள் மது.

Episode # 02

Episode # 04

தொடரும்!

{kunena_discuss:1240}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.