(Reading time: 7 - 13 minutes)

வர்கீஸ் குழுவினரால் பிடிக்கப்பட்டு தவறுதலாய் அந்த இடத்தில் படிந்திருந்து கொண்டிருந்த கடல் அட்டைகள் வெகு நேர சீற்றத்தையும் பசியையும் ப்ரியனின் தீர்த்துக் கொண்டன. பத்மினியை சிதைக்க சென்றுகொண்டிருந்த ப்ரியன் விதியின் வசத்தால் கொஞ்ச கொஞ்சமாய் தானே சிதைந்து கொண்டு இருந்தான். 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

த்யா தன் அறையில் குமைந்து கொண்டிருந்தான். நிக்கோலஸ் இத்தனை கோபமாய் பேசி அவன் பார்த்ததே இல்லை இந்த மூன்று வருடங்களில் அவர்களில் தொழில் முறையில் எந்தவிதமான சின்ன தவறு கூட நடந்திருக்கவில்லை அப்படியிருக்க இந்த சில மணி நேரங்கள் சுரங்கப்பாதையின் செயல்பாடுகள் தெரியவில்லை கரைந்து வரும் யுரேனியத்தின் அளவும் முற்றிலும் நின்று போயிருந்தது என்று சொல்லும் போது சத்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை, ப்ரியனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அங்கிருந்த ஊழியர்கள் ஒருவரைத் தொடர்பு கொண்ட போது பவளப்பாறைகள் பாதுகாப்பும் செயற்கைத் திட்டுகளும் அமைக்கும் பணியும் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவந்தது.

அப்போது ப்ரியன் எங்கே ?

பரத்தும் தன் எண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வைத்திருந்தான். அந்த பணியாள் மூலம் புதிய இரு நபர்கள் ஒரு ஆணும் பெண்ணும் வந்திருப்பதாகவும், ப்ரியனின் வேலையை தன்னையே கவனிக்க சொன்னதாக பரத் சொல்லியதாக வந்த செய்தியும் சத்யாவை மிகவும் குழப்பமடையச் செய்தது

இதில் நிக்கோலஸின் கோபமான பேச்சு வேறு உசுப்பிவிட சில நிமிடங்கள் நிதானமாய் யோசிக்கலானான்.

ப்ரியனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை பரத் அவனின் வேலைகளை மற்றவனுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறானேயானால், அவனுக்கு என் சதி வேலைகள் தெரிந்திருக்குமோ, ஆழம் பார்க்க கூட பரத்திடம் பேச முடியவில்லையே, இந்நேரத்தில் இங்கிருந்து குழம்பிக்கொண்டு இருப்பதை விடுத்து நேரே அந்தமானிற்குச் சென்றுவிட்டால்தான் என்ன? என்று தோன்றியது ?

ஆனால்.... உண்மை வெளிப்பட்டு இருக்கும் நிலையில் பரத்தை எப்படி சந்திப்பது.

இன்னும் சிறிது நேரத்திற்குள் இந்த சிக்கலை சீர் செய்யாவிட்டால் நிக்கோலஸின் கோபத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். அது மேற்கொண்டு செய்யப்போகும் தொழிலுக்கு இடைஞ்சலாக இருக்குமே ?!

குழப்பத்தை விடுத்து நேரிலேயே சென்று பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று அந்தமானுக்கு டிக்கெட்டுகளுக்கு ஏற்பாடு செய்தான் சத்யா....!

தொடரும்...

Episode # 22

Episode # 24

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.