கண்கள் மின்ன சொன்னவளை கோபத்துடன் பார்த்தான்.
“என்ன சொன்னே?”
உறுமலுடன் கேட்டான்.
அவனது முகத்தைப் பார்த்த போதே அவன் கோபம் புரிந்தது.
அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை என்ற நினைத்திருந்த நேரத்தில் கூட அவன் இத்தனை கடுமையைக் காட்டியதில்லை.
“என்ன சொன்னேன்னு கேட்டேன்ல?”
அவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
“முட்டாள்ங்கிறதை அடிக்கடி நீ காட்டிக்கிட்டேயிருக்கே.”
இப்போது அவன் கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது.
“மாமா.”
அவளது அழைப்புக்கேட்டு அவளைத் திரும்பிப்பார்த்தான்.
“சித்தி இறந்த பிறகு அந்தக் குடும்பம் எத்தனை சிரமப்பட்டுச்சு தெரியுமா? நித்யா மூத்த பொண்ணு. பதிமூனு வயசுதான் ஆகுது. இரண்டுங்கெட்டான் வயசு. அவளுக்குப் பிறகு ஒரு தம்பி, தங்கை வேறு. சித்தப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
று வழியில்லை. பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன்தான் தங்களுடைய வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணினான்.
“அம்மா. எங்களோட வாழ்க்கையை ஆரம்பிக்கத்தான்.”
அவன் சொன்னது வடிவிற்குப் புரியவில்லை.
“என்னப்பா சொல்றே?”
“அம்மா. அவளுக்கு கொஞ்சம் டயம் கொடுக்கனும்னு நினைச்சேன்.”