(Reading time: 17 - 33 minutes)

"உனக்கு புத்தி கெட்டுப்போச்சா?எதையும் வெளிப்படைய் சொல்லி தொலைக்க மாட்டியா டா?உன் ப்ரச்சனை என்ன."இதை சற்றும் எதிர்பாராதவன் பொறுமை என்று வாயமர்த்த செய்கை காட்டினான்

"என்ன பொறுமை என்ன...காத்ல இருக்காம் பொண்டாட்டி ன்னு செல்லம் கொஞ்சுவாராம் காத்ல் கனவுகளை யும் தருவாராம்...இப்போ நிஜத்தில் நீ யாரோ நான் யாரோ...என்ன அர்த்தம் இது..இத்தனை நாளா கொடுத்தபரிசுகள் நினைவுகள் முத்தங்கள் எல்லாத்துக்கும் என்ன அர்த்தம்....நான் என்ன உன் டைம் பாஸா?"

படபடவேன் பொறிந்து தள்ளினேன்.இந்த வார்ததைகள் அவன் ரோஷத்தை பதம் பார்ததது.நான் எதிர்பார்த்ததும் அதுவே

"கயல் போதும் நிறுத்து.உன்னை லவ் பண்றேன் பணணுவேன் எத்தனே ஜன்மம் ஆனாலும்.நீ தான் என் பொண்டாட்டி அந்த உரிமையில தான பழகினேன்....பரிசுகள் முத்தங்கள் எல்லாம்...என் காதலை கொச்சப்படுத்தாத..."இறுக்கமாயிருந் அந்த மேகம் சட்டென மழை பொழிந்தது. தூரலாய் மாறியது

"இப்போதைக்கு நான சொல்ல நினைப்பது நம் கல்யாணம் பற்றி யோசிக்க்கூட முடியாது.உன்னை காத்திருக்க வைகக எனக்கு விருப்பமிலலை."

"என்னயிது அபத்தம்"

என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு என் கண் நோக்கி பேசினான்.அவன் கை உஷ்ணம் அவன் காதலை சோல்லியது.அதில் அவன் நடுக்கம் அவன் வலி சொல்லியது.

"கயல் உன்னை பார்த்ததிலிருந்தே நீ என் வாழ்க்கை யோட ஒன்றிட்ட.என் காதல் என் கனவு என் வாழ்க்கை எல்லாம் நீ தான் நிறைஞ்சிட்ட. என்னுடையவள் நீ என்ற எண்ணத்திலும் உரிமையிலும் தான் என் காதலை வெளிபடுத்தினேன்.ஆனால் விதி என் வாழக்கையில் பல திருப்பங்கள் ஏற்படுத்தியது.அதனால் சில விஷயங்கள் மாறிப்போச்சு.உன்னை கரம் புடிச்சி என் வீட்டினுள் ன் மனைவியா கொண்டுபோய் அழகு பார்ககும் ஆசை எல்லாம் எனக்கும் உண்டு கயல்.இப்போ இருக்கும் சூழ்நிலை ய்ல் எல்லாம் கானல்நீர் தா.நீ எனக்காககாத்திருப்ப தெரியும் ஆனால் அது கொடுமை.உன்னை கொடுமை படுத்த விரும்பலை.நீ தேவதை டீ நல்லா சந்தோஷமா இருக்கனும்"கண் கலங்கினான்."நீ என்னை காதலிக்கும ஒரு காரணத்திற்காக உன் மேல என் சுமையை ஏற்றி என் கூட இழுத்து போக விரும்பலை.நீ வீட்டில் உங்க அப்பா சொல்லும் பையன் (நெஞ்சு அடைத்து வார்த்தை வெளிவந்தது)கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாயிரு கயல்.இது தான் நான் சொலல நினைப்பது.உன் கிட்டயிருந்து விலஙகி நிற்பது.

இது பைததியக்காரத்தனம் தெரியும்.நதியில் இறங்கின உனனை நனையாம இருக்க சொல்றேன்.ஆனால் முழகாம இருக்க ஒரு எச்சரிக்கை னனு நினைச்சி தான் சொல்றேன்"

அவன் பேச பேச அவன் கை என் கையை இறுக்கியது.அவனின் முடிவு அவனுக்கு எத்தனை வலி கொடுத்தது என்று நன்றாக புரிந்தது.

"என்ன சொல்றீங்க புரியலை.உங்களுக்கு நான காத்திருப்பது எப்படி கொடுமை ஆகும்.நான் உங்களுக்கானவள்னு ஆன பிறகு கல்யாணம் அங்கீகாரம் மட்டுமே.அது எப்படிகொடுமை.உங்க சூழ்நிலை என்னன்னே எனக்கு தெரியலை புரியலை.அது எதுவாயினும் உங்களுக்கு தோள் கொடுக்க தயாரா இருக்கேன்.நான் எப்பவும் உங்களுக்கு சுமையாக மாட்டேன்.உங்களை பிரிவது தான எனக்குகொடுமை.என் மனசிலிருந்து உங்களை வெளியே எடுக்கவே முடியாது.நீங்க என் உயிர் உணர்வு மூசசு எல்லாத்திலேயும் கலந்திருக்கீங்க அறிவு"

"கயல் நீ காத்திருப்பேன்னு சொல்வது ஒரு நிலையில்லா வாழ்க்கைக்கு.நாளை அது மாறக்கூடும்.வெறும் வெறுமை தான் மிஞ்சும்.இதெல்லாம் உனக்கு வேண்டாம்.இப்போ என்னை பிரிவது உனக்கு வலிக்கும் ஆனால் காலம் எல்லா இரணங்களையும் சரி செய்யும்.உனக்கேற்ற அனபான் துணை உனக்கு கிடைக்கும்.அமைதியான ஒரு வாழ்க்கை உனக்கு அமையும்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"அவசர முடிவு அறிவு.என்னை பிரியர வலி உங்களுக்கும் உண்டு தானே.அது கொடுமை தானே.உங்களை வேதனை படுத்தி என்னையும் கொல்லாதீங்க."சொல் எல்லாம் கண்ணீராய்வழிந்தது.

"கயல் உன் சிரிச்ச முகம் தான் என் பலம் கயல்.அழாதே.வாழ்க்கை யாருக்காகவும் தேங்கி நிற்கக்கூடாது.ஓடிக்கிட்டே தான் இருக்கனும்.நீ எனக்காக் காத்திருக்காதே."

அவன் எத்தனை வலிமையான்வன் அறிவேன்.அவன் முடிவில் அவன் எத்தனை உறுதி காட்டுபவன் நன்கறிவேன்.அதுவே என்னை காயப்படுத்தியது.நான் தோற்றப்போனேன்.

"அறிவு காயப்படுத்திட்டு அழாதேன்னா எப்படி என் சந்தோஷமே நீங்க தான்.நீங்க என் பக்கததிலிருந்தா தான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க பிரியனும்னு முடிவு பணணிட்டு காரணங்ஙளை தேடறீங்க.நான் பிரியக்கூடாதேன்னு தவிக்கிறேன்.உங்க பார்வை எனக்கு புரியலை என் மனசு உங்களுக்கு புரியலை."

அவன் கணகள் எனக்காக பன்த்தது தவிர அவன் முடிவில் மாற்றம் இல்லை.எனக்கும் வாரத்தைகள் தீர்ந்து போனது.கண்ணீர் மட்டுமே பேசியது.என்னை சுமையாக நினைக்கிறானோ?காதல் சுமைய்கக்கூடுமோ?நான உன் சுமையல்ல எப்படிபுரியவைப்பேன்.கடலலைகளுங்கு சரியாக என் எண்ண  அலைகளும் பாய்ந்தது.அவன் முடிவை மாற்றும் உக்தி தெரியவில்லை. முடிவை ஏற்கும்வழி தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.