பெண் மூத்த சகோதரியின் இளைய மாமனாரின் மகள்தான்.
வயது வித்தியாசம் அதிகம் என்றும் சொல்லி மறுத்துப் பார்த்தான்.
ஆனால் அவர்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. அவனது திருமணத்தைப் பற்றியே யோசிக்காமல் இருந்தவர்கள், இப்போது அதைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள்.
விசயம் கேள்விப்பட்ட கருப்பையா மகிழ்ந்து போனான்.
இப்போதாவது அவனது வீட்டாருக்கு அவனுக்கு ஒரு குடும்பம் அமையவேண்டும் என்று தோன்றியதே.
அவனும் நண்பனிடம் பேசினான்.
அவனுக்கு பெண் எப்படி என்று தெரிய வேண்டும் என்று தோன்றியது.
இத்தனை வருடங்கள் கழித்து அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையப் போகிறது. அது நல்லபடியானதாக இருந்தால்தான் அவனால் நிம்மதியாக இருக்க முடியும்.
அவன் நேரிலேயே சென்று பெண்ணைப் பற்றி விசாரிக்க முடிவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ையாவும் சேர்ந்து போகும்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது.
வண்டியில் வரும்போதெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தான்.
சிவரஞ்சனிக்கும் மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது.
அவனது சகோதரிகள் அவனுக்கு நல்லது செய்வதாகச் சொல்லி வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டார்கள்.
மழைத்தூறல் ஆரம்பித்தது.