(Reading time: 6 - 12 minutes)

கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கியவள் ராமை தேடி வேகமாக நடந்தாள்.

"ஹோய்... சீதா.... எங்க டி போற இவ்ளோ வேகமா என்ன கூட கவனிக்காம?"

"ஹே அஞ்சு... நீ ராம பாத்தியா?"

"எந்த ராம்?. நம்ம கிளாஸ் ராம் ஆஹ்? அவன் எங்க இருகனோ?"

"அவன் எங்க இருந்த எனக்கென்ன?. நா கேட்டது என் ராம் எங்கன்னு?"

"என்ன சொன்ன என்ன சொன்ன?. உன் ராம் ஆஹ்?"

நாக்கை கடித்தவள் பிறகு முக பாவத்தை மாற்றி கொண்டு, "ஆமா என் ராம் தான்" என்றாள் தைரியமாக.

"ஹ்ம்ம்... அதுசரி. உன் ராம் கான்டீன் கிட்ட ரகு கிட்ட பேசிட்டு இருகாங்க"

"தேங்க்ஸ் டி" என்று முகம் மலர்ந்தவள் ராமை தேடி சென்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ராமை தூரத்தில் இருந்து பார்த்தவள் கண்களில் ஏனோ நீர் கோர்த்தது. அவன் அருகில் சென்றவள் அதை மறைத்து கொண்டு பேச தொடங்கினாள்,

"அப்பாக்கு எப்படி இருக்கு ராம் இப்போ?"

"இப்போ பரவால்ல சீதா"

"என்ன ஆச்சு திடிர்னு?"

"தெரில சீதா. சடன் ஆஹ் மைல்டு அட்டாக் வந்துடுச்சு"

"இப்போ எல்லாம் நார்மல் தான?"

"ஹ்ம்ம்... இப்போ நார்மல் தான்"

"ஓகே ராம். எல்லாம் சரி ஆகிடும். வா கிளாஸ்க்கு போலாம்" என்று அவனை அழைத்து சென்றாள்.

அவனின் முக வாட்டத்தை கண்டவளுக்கு அவளின் மனசில் இருக்கும் ஆசையை அவனிடம் தெரியப்படுத்த மனமில்லை. அவனும் அவனது குடும்பம் இப்பொது இருக்கும் சூழ் நிலையில் அவன் நன்றாக படிக்கச் வேண்டும். அவனை இப்போது காதல் வசனம் எல்லாம் பேசி திசை திருப்ப விரும்பவில்லை. இப்படியே நாட்கள் நகர, அவர்களின் நட்பு வளர்ந்து கொண்டே போனது. ஆனால் ஒரு போதும் ராம் அவளை வேறு ஒரு கோணத்தில் நினைத்ததில்லை. அவளிடம் நட்பாகவே இருந்தான். தனது காதலை மனதிலே பூட்டி வைத்து கொண்டிருந்தாள் சீதா.

அவர்களின் இறுதி செமெஸ்டரில் கடைசி நாள் தேர்வு வந்தது. சீதாவின் மனதில் பல கேள்விகள் உருண்டோடியது. இன்று விட்டால் அவனை பார்க்க முடியாது. இன்றே அவனிடம் அனைத்தையும் கூறிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அப்போது அங்கு வந்த பியூன் அண்ணா,

"சீதா, ராம் எங்க மா", என்றார் ஒரு வித பதட்டத்தோடு

" ராம் ரூம் நம்பர் 7 ல இருப்பான். ஏன் அண்ணா அவனை தேடுறீங்க?"

"இப்போ தான் மா ராம் வீட்ல இருந்து போன் வந்துது, ராம் ஓட அப்பா தவறிட்டாராம். அவனோட மாமா இப்போ காலேஜ் வந்துகிட்டு இருக்காரு அவனை கூட்டிட்டு போக" என்றார் சோகமாக.

அதை கேட்ட சீதா அதிர்ந்தே விட்டாள். இதை என்னுடைய ராம் எப்படி தாங்கி கொள்வான் என்று யோசித்தவள்,

"அண்ணா எனக்காக ஒரு உதவி செயிரீங்களா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"சொல்லு மா"

"இப்போ ராம் கிட்ட இத பத்தி சொல்ல வேண்டாம் எக்ஸாம் முடியட்டும் அண்ணா அப்புறம் சொல்லிக்கலாம்"

"அது எப்படி மா சொல்லாம இருக்க முடியும்?"

"அண்ணா... இது கடைசி எக்ஸாம். இது அவளோட லைப் கு ரொம்ப முக்கியம். அவனோட அப்பா கனவு கண்ட மாதிரி ராம் ஒரு என்ஜினீயர் ஆகணும் ப்ளீஸ் அண்ணா எக்ஸாம் முடிஞ்சதும் சொல்லுங்க. அவங்க மாமா வந்தாலும் அவர் கிட்ட சொல்லி புரிய வச்சி வெயிட் பண்ண சொல்லுங்க. இன்னும் மூணு மணி நேரம் தான்" என்று கெஞ்சினாள்.

அவள் சொல்வதும் சரி என்று பட, "சரி மா" என்று கூறி விட்டு அவர் சென்று விட்டார்.

இனி என்ன நடந்தது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம் பிரிஎண்ட்ஸ்...

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1228}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.