(Reading time: 15 - 30 minutes)

அவன் விசமமான பதிலால் வெகுண்டான் கௌதம்.

அதற்குள் சரவணன் அவன் மீதுபாய்ந்துவிட்டான்.

"டேய் அண்ணியைப் பத்தி என்னடா சொன்னே? அவங்க அம்மாவுக்கு சமம்டா. அவங்களைப் பத்தி தப்பாப் பேச உனக்கு நாக்கு கூசலையா?"

சண்டையை விலக்கி மற்றவர்களை சமாதானம் செய்து வக்கீல் அவரவருக்கு சேர வேண்டியதைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை சிவரஞ்சனி.

அப்படியே பித்துப்பிடித்தவள் போன்று அமர்ந்திருந்தாள்.

சீதாலெட்சுமி மகளை தனது வீட்டிற்கு  அழைத்துப்பார்த்தாள். ஆனால் சிவரஞ்சனி கிளம்பவில்லை.

மேனகாதான் அவர்களுக்குத் தேவையானதைப் பார்த்துக்கொண்டாள். சில மாதங்கள் கடந்த நிலையிலும் மகளிடம் மாற்றம் வரவில்லை என்பதை எண்ணும்போது சீதாலெட்சுமிக்கு மனம் தாளவில்லை.

அவள் மேன

...
This story is now available on Chillzee KiMo.
...

னே?"

சந்திரசேகர் அவளை சமாதானப்படுத்தினார்.

விதாவுக்கு வரிசை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள் சிவரஞ்சனி.

அவள் முகம் மலர்ந்திருந்தது.

மகளின் மகிழ்ச்சியைக் காண சீதாலெட்சுமிக்கும் மகிழ்ச்சியாகயிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.