(Reading time: 13 - 25 minutes)

அதிலும் நீ எனை வாள் போட்டிக்கு அழைத்த போது உறுதியே செய்துவிட்டேன்,நீ சிவகங்காவதியென. என்ன பார்க்கிறாய் பாளையத்தை கைப்பற்ற எண்ணுபவன் அதன் விவரங்கள் அறியாமல் வந்துவிடுவானா? அனைத்தும் யாம் அறிவோம். உன் திறமையில் தொடங்கி உன் சிவ பக்தி வரை அனைத்தும்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நானே எதிர்பாரா ஒன்று நீயே களத்தில் இறங்குவாய் என்பது தான்.ஆனால் இப்போது என் வேலை இன்னும் எளிதாகிவிட்டது.அரசரை நாடு கடத்தினால் கூட நாட்டை எங்கள் வசம் ஒப்படைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஆனால் இப்போது சிறைப்பிடிக்க பட்டிருப்பதோ மன்னனின் செல்ல மகள்.வேறு யோசனை ஏதுமின்றி மன்னன் எங்கள் கால் பணியத் தான் வேண்டும். ஏனெனில் பெண்ணை பறித்துச் செல்வது என்பது அவமானத்திலும் மிகுந்த அவமானம் அல்லவா?”

“நீ கூறுவதனைத்தும் சரிதான், ஆனால் அத்தனையும் சாதாரண பெண்களுக்கு.நான் சிவகங்காவதி, அத்துனை எளிதில் அடிபணியவும் மாட்டேன், பணிய வைக்கவும் இயலாது.

எனக்காக ஒரு வேளை தேசத்தை பணிய வைக்கும் முடிவிற்கு என் தந்தை வந்தாலும் மறுச் சணம் எவ்வித யோசனையுமின்றி எனை நான் மாய்த்துக் கொள்வேன் நஸீம்.இது மிரட்டல் அல்ல சத்தியம்”, என அத்தனை தளர்ந்த நிலையிலும் பெண் சிங்கமாய் கர்ஜித்தவளை கண்கள் மின்ன பார்த்திருந்தவனின் கண்ணெதிரிலேயே மூர்ச்சையாகி விழுந்திருந்தாள் சிவகங்காவதி. 

தொடரும்...

Episode 02

Episode 04

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.