(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

துரிமா..” என்று அங்கிருந்தவளை பார்த்து அஜய், சுஜனா இருவரும் அதிர்ச்சியோடு அழைக்க,

“ஆமாம் நான் தான்..” என்றவள், மீண்டும் துப்பட்டாவால் முகத்தை மறைத்து, பின் அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,

“சாரி நான் நீங்க பேசியதையெல்லாம் கேட்க வேண்டியதா போச்சு.. நான் சாத்விக், சுஜனா கல்யாணம் பத்தி சாத்விக் கிட்ட பேச வந்தேன்.. அந்த சமயம் பார்த்து நீங்க ரெண்டுப்பேரும் பேசிக்கிட்டு இருந்ததை பார்த்ததும், என்ன பேசறீங்கன்னு ஒட்டு கேக்க வேண்டியதா போச்சு.. சாரி..” என்று மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டாள்.

யாராவது இவள் அஜயோடு பேசுவதை பார்த்துவிடுவார்களா? என்று ஏற்கனவே சுஜனா பயந்து போயிருந்தவள், இப்போது இருவரும் பேசியதை மதுரிமா கேட்டதில் அவள் மிகவும் பதட்டமடைந்தாள்.

அதை கண்டுக் கொண்ட மதுரிமா, “ஹே சுஜனா ரிலாக்ஸ்.. நானும் சாத்விக்கிற்கும் உனக்கும் ஏற்பாடு செஞ்ச கல்யாணம் நிக்கணும்னு தான் நினைக்கிறேன்..” என்றாள்.

“என்ன சொல்றீங்க மதுரிமா?” என்று அஜய் வியப்பாக கேட்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் " ராணி... மகாராணி..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அன்னைக்கு பார்ட்டில நடந்ததை நீங்களும் பார்த்தீங்கல்ல, சாத்விக் தேவிக்கிட்ட எவ்வளவு கேரிங்கா நடந்துக்கிட்டாரு.. அதைப்பார்த்து தானே உங்களுக்கும் சாத்விக் மேல டவுட் வந்துச்சு.. சுஜனாவும் அதுப்பத்தி யோசிச்சிருந்திருப்பாங்க.. அது உண்மை தான்,

சாத்விக் தேவியை காதலிச்சிருக்காரு.. ஏதோ ஒரு சூழ்நிலையில் ரெண்டுப்பேரும் பிரிஞ்சிட்டாங்க.. இப்போ சில வருஷம் கழிச்சு மீட் பண்ணியிருக்காங்க.. சாத்விக் இன்னும் தேவி மேல அன்பா இருக்கறது பார்த்த நமக்கே தெரியுது.. அப்போ ஏன் அவங்க ஒன்னு சேரக் கூடாது..” என்று அவள் கேட்கவும்,

“இது நடந்து விட வேண்டுமே..” என்று அஜயும் சுஜனாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நினைத்தனர்.

“இது நடக்குமா மதுரிமா..” என்று அஜய் கேட்க,

“ஏன் நடக்காது.. கண்டிப்பா நடக்கும்.. அப்படியே உங்க கல்யாணமும் நடக்கும்..” என்று அவள் சொல்ல,

“எப்படி..” என்று இப்போது சுஜனா ஆர்வமாக கேட்டாள்.

“இருங்க சாத்விக் வரட்டும் இதைபத்தியும் பேசலாம்..” என்றவள், அவன் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்க்க, அந்த நேரம் சாத்விக்கும் அந்த ரெஸ்ட்டாரன்ட் உள்ளே நுழைந்திருந்தான்.

தாடி, மீசை, கண்ணில் கூலர் என்று தன் தோற்றத்தை மாற்றி வந்திருந்தான். இருவருமே நடிகர்கள், அவர்களை பார்த்தால் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துக் கொள்ளும், ஆனால் அதையும் அவர்கள் எளிதாக சமாளித்துவிடுவார்கள். ஆனால் இப்படி இருவரும் சந்தித்துக் கொள்வது யாராவது பத்திரிக்கைக்காரர்களுக்கு தெரிந்தால்,

ஏற்கனவே இவர்களை பற்றி சேர்த்து செய்தி போடுபவர்களுக்கு இவர்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும் என்பதால் இருவருமே தங்களை மறைத்து வரும்படி ஆகிற்று,

உள்ளே நுழைந்தவன் மதுரிமாவை தேட, அவளும் அவனை கண்டுக் கொண்டு கையசைத்தாள். அவளை கண்டுக் கொண்டவன், அவளோடு இருந்த அஜய் மற்றும் சுஜனாவை பார்த்து யோசனைக்குள்ளானான்.

“யாதவி பத்தி கொஞ்சம் பேச வேண்டியிருக்கு வர்றீங்களா சாத்விக்?” என்று அலைபேசியில் கூறவும் அவனும் கிளம்பி வந்தான். இங்கே பார்த்தால் அஜய், சுஜனா இருப்பதால் என்னவாக இருக்கும் என்பது புரியாமல் குழப்பத்தோடு அவர்கள் அருகில் சென்றான்.

“ஹாய் மதுரிமா, ஹாய் அஜய்..” என்று இருவரையும் பொதுவாக பார்த்து சொன்னவனுக்கு, சுஜனாவை பார்த்து ஹாய் சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

அவளுக்கும் இந்த திருமணம் வேண்டாம் என்ற மனநிலை இருந்தாலும், அஜய் திருமணம் செய்துக் கொள்ள கேட்டது அவனுக்கு தெரிந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று கொஞ்சம் அச்சத்தோடு இருந்தாள்.

“யாதவி பத்தி பேசணும்னு தானே வரச் சொன்ன மதுரிமா.. இப்போ வேற ஏதாச்சும் விஷயமா?” என்றுக் கேட்க,

“ஆமாம் யாதவி பத்தி பேச தான் வரச் சொன்னேன்.. இங்க வந்து அஜய், சுஜனாவை எதைச்சேயா தான் பார்த்தேன்.. இப்போ யாதவி பத்தி பேசும் போது இவங்களும் இங்க இருப்பது நல்லதுன்னு தோனுச்சு..” என்றாள். அவனுக்கு புரியாவிட்டாலும் அமைதியாக இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.