“இல்லவே இல்ல . . அவ சகோதரனா என்ன பாக்கல. என்னால சுவாதி லவ்வை அக்சப்ட் பண்ண முடியல. அதுக்கு என்ன ரீசன்னு எனக்கே சத்தியமா தெரியாது. சுவாதி கேஸ் ஹேண்ட்ல் பண்ண எத்தனையோ லாயர்ஸ் இருக்காங்க இல்ல வேற எதாவது செய்யலாம். எதுக்கு உங்க பையன் பின்னால போகணும் தெரியல. என்கிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்றவ . .ஆகாஷ் பத்தி மட்டும் எதுவுமே சொல்லல” மனமுடைந்தவனாய் பேசினான் சூர்யா
“உன்னால எப்படி சுவாதிய லவ்வை அக்சப்ட் பண்ண முடியலையோ அதே மாதிரிதான் சாருவால உன்னை ஏத்துக்க முடியல. நீ கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணிகிட்டா நிச்சயமா மூணு பேரோட வாழ்க்கையும் நரகமாயிடும். என் மகன் ஆகாஷ் இடத்துல யார் இருந்தாலும் இதையே தான் நான் சொல்லி இருப்பேன்.” என ராமமூர்த்தி மீண்டும் சூர்யாவிடம் விளக்கினார்.
அங்கு நடந்தவற்றை கூறி முடித்தார். இவைகளை கேட்டதும் சாருவிற்கு சங்கடமாக இருந்தது. அவள் ஒருநாளும் சூர்யாவை காதலித்தது இல்லை. ஆனால் அவன் நேசிக்கிறான் என்பதை அறிந்ததுமே விலகதான் எண்ணினாள். சூர்யாவை தன் மிகச் சிறந்த நண்பனாக மட்டுமே கருதி வந்தாள்..
ஒரு பெண் யாரிடமும் மனம்விட்டு சிரித்து பேசினால் அதை காதல் என்று ஏன் இந்த ஆண்சமூகம் எடுத்துக் கொள்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலம் பெண் அடிமைதான். தனக்கு பிடித்த செயலை செய்ய . . தனக்கு பிடித்த நபருடன் பேச கூட சுதந்திரம் இல்லை. தான் இயல்பாய் இருக்க பெண் மற்றவர் மனதை அகழ்வாராய்ச்சி செய்து அதன் படி நடக்க வேண்டிய நிலையில் உள்ளாள்.
சாரு சிந்தனையை ராமமூர்த்தியின் வார்த்தைகள் களைத்தன “பத்து நாளைக்கு முன்னாடிதான் அவனுக்கு கல்யாணம் ஆச்சு” என்றார்.
“பொண்ணு யாரு?” ஆகாஷின் கேள்வி
“உன் அசிஸ்டெண்ட் லியா” என்றார்
“என்ன இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி?” ஆகாஷிற்கு எரிச்சலாய் இருந்தது.
“லியாக்கு கல்யாணம் ஆனா உனக்கு ஏண்டா இத்தன பீலீங்க்ஸ்” என்பதைப் போல சாரு முறைக்க . . அவளை தவிர்த்தான் ஆகாஷ்.
“சூர்யா என்னை சந்திக்க வந்திருந்தானே. . ரொம்பவும் மனசு ஒடிஞ்சி சோர்வாகிட்டான். அதே சமயம் எதோ பென்டிரைவ் வேணும்னு லியாவும் வீட்டுக்கு வந்தா. நான்தான் லியாகிட்ட சூர்யாவ டிராப் பண்ண சொன்னேன். அவ்வளோதான் எனக்கு தெரியும். பத்து நாளைக்கு முன்னாடி சூர்யா போன் பண்ணி கல்யாணம்னு சொன்னான். இந்த அமர்னளத்துல அதை சுவாதிகிட்ட மட்டும் சொன்னேன் உங்க்கிட்ட அப்புறமா சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.” தனக்கும் இதற்கும் இவ்வளவுதான் சம்பந்தம் என்பதாய் அவர் நகர்ந்தும்விட்டார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
ஆகாஷ் பால்கனியில் போய் நின்றான். அவனுக்கு தனிமை தேவைப்பட்டது. சூர்யா லியாவை திருமணம் செய்துக் கொண்டதில் ஆகாஷிற்கு வருத்தம். லியா நல்ல புத்திசாலியான பெண். திருமணத்திற்கு பிறகு லியாவை பிராக்டிஸ் செய்ய விடுவானா? அப்படியே விட்டாலும் லியாவை தன்னிடம் வேலை பார்க்க அனுமதிக்க மாட்டான். லியாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என பலவாறு சிந்தித்த வண்ணம் இருந்தான்.
அவன் மனஓட்டத்தை புரிந்துக் கொண்ட சாரு “என்ன தேவதாஸ் மாதிரி இருக்கிங்க?” என கேட்டவளை
“எனக்கு கொஞ்சம் வேல இருக்கு” என நகர முயன்றவன் கையை பிடித்து இழுத்து
“இப்ப என்ன ஆச்சு? நல்லபடியா கல்யாணம் ஆயிடுச்சிதானே?” சாருவும் கேட்க
“சூர்யா என்னை பழிவாங்கதான் இப்படி பண்ணியிருக்கான். எங்க பிரெண்ட்ஷிப்ப பயன்படுத்திக்கிட்டான்.” முகம் சிவக்க பேசினான்.
“சூர்யா அப்படிலாம் இல்ல . . நீ ரொம்ப யோசிக்கிற ஆகாஷ்”
“நோ. . உனக்கு அவனை தெரியாது சாரு”
“எனக்கா தெரியாது . . எத்தன வருஷமா அவனோட பேசி பழகியிருக்கேன்”
“இல்ல சாரு சம்திங் ராங் . . எங்கயோ எதோ இடிக்கிது . . என்னால பீல் பண்ண முடியுது. நல்லது நடந்தா சரிதான்.” என தவித்தான்.
அவனை அதிசயமாய் பார்த்தாள் சாரு. அவள் மனதிலும் அதே எண்ண ஊர்வலம்தான்.
அப்போது அங்கே அழுக்கு வேட்டி கலைந்த பழுப்பேறிய தாடி தலை முடியுடன் ஒருவன் உள்ளே வந்தான். அவன் வந்தவுடன் ராமமூர்த்தி பரபரப்பானார். பத்ரிநாத் மற்றும் சுவாதியும் ஆர்வமாய் வந்தவனை சுற்றி நின்று கவனிக்க தொடங்கினர்.
“சொல்லு ரவி என்ன ஆச்சு?” ராம்மூர்த்தி கேட்க
“துரைய கைது பண்ணிட்டாங்க. தன் அழுக்கு பையில் இருந்து சில காகிதங்களை எடுத்து கொடுத்தான். “இது துரையோட சொத்து விவரம். . அதை கோர்ட் பிரீஸ் பண்ணிட்டாங்க. இப்ப அவனுக்கு உதவிக்கு உண்மையா யாரும் இல்ல. அவன்கிட்ட எல்லா இருக்கு ஆனா எதுவும் பயன்படுத்த முடியாது.”
இந்த உரையாடலையும் அதன் தாக்கத்தையும் சாருவால் கிரகிக்க முடியவில்லை. காரணம் ரவி என்ற பெயர் அதுவும் அவன் கோலம் தலையை சுற்றியது.
இதை சுவாதி புரிந்துக் கொண்டாள். அவர்கள் பேசி முடித்ததும் ரவியை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றாள். ஐந்து நிமிடத்தில் வெளி வந்தவனைப் பார்த்துதான் சாருவிற்கு நிம்மதி ஏற்பட்டது..