ஆனால் அதற்குள் வள்ளி தன் சின்னய்யாவின் காரின் ஓசையை கேட்டு வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க, அதற்கு மேல் கார் உள்ளேயே இருக்க முடியாது என்பதை உணர்ந்து அவளை மெல்ல விளக்கி இருக்கையின் பின்னால் அமர வைத்தவன் இறங்கி மறுபக்கம் வந்து தன் மனைவியை கையில் அள்ளி கொண்டான்...
இதுவும் முதல் முறை அவள் விழித்து கொண்டிருக்கும் பொழுதே அவளை அள்ளி கொள்வது...
பவித்ராவும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டு கொண்டவள் மெல்ல புன்னகைத்தாள்...
நல்ல வேளை... இங்கிதம் தெரிந்த வள்ளி கதவை திறந்து வைத்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்...
பூச்சென்றாக கனத்த தன் மனைவியை தன் அறைக்கு அள்ளி வந்தவன் அவன் கட்டிலில் கிடத்த, அவளோ நாணத்தில் கண்ணை மூடிகொண்டாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவருக்குமே அந்த ஒரு வாரம் மனதை அழுத்தி வந்த பாரம் நீங்கி தொலைந்திருந்த உறக்கம் தானாக கண்களை தழுவியது...
இருவருமே ஒருவருக்கொருவர் தங்களை மறைத்து நடிப்பது தெரிந்தாலும் அதை ரசித்து கொண்டே உதட்டில் புன்னகை பூக்க அந்த ஒரு வாரத்தை திருப்பி பார்த்தவாறு நிம்மதியாக உறங்கினான் ஆதி...