“ஆனாலும் ஷான்யாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துருக்கலாம் ஆத்வி..”
“ம்ம் நேத்து என்ன பேச்சு பேசினா கொஞ்ச நேரம் தவிக்கட்டும்..அப்பறமா கால் பண்ணி பேசுறேன்..”
“பார்த்தியா லவ் செட் ஆனவுடனே வேலையை காட்டுற..திமிரு டா உனக்கு…”
“ச்ச ச்ச அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஜி அவளுக்கு எல்லாத்தையும் ஏத்துக்க கொஞ்சம் டைம் தேவை அதனால தான் அமைதியா வந்துட்டேன்..நீ கூட அங்கிள்ட்ட ஏதோ சொன்னியே அவ முகம் அப்படியிருக்கு இப்படியிருக்குனு அதான்..”
“இத்தனை வருசமா கூட இருந்து என்னை பத்தி சரியா தெரிலயே டா ஆத்வி உனக்கு..அவ முகத்தை யாரு பார்த்தா..சும்மா அவரை சமாளிக்குறதுக்காக வாய்ல வந்ததை அடிச்சு விட்டேன்..நல்ல வேளை சீக்கிரமே சமாதானம் ஆய்ட்டார் இல்லனா இன்னும் தேவையில்லாத பிட்டெல்லாம் போட்டுருக்கனும்..”
“அடிப்பாவி!!!”
“என் பொண்டாட்டி எவ்ளோ ஜீனியஸா யோசிச்சு பேசிருக்கா அவளை பாராட்டாம இப்படி ஷாக் ஆகுறியே ஆத்வி..”
“ம்ம் நல்ல மனைவி நல்ல கணவன்..அருமை…”
“அடிங்க எங்களேயே கலாய்க்குறியா இப்போவே அங்கிள்கிட்ட உன்னைபத்தி தப்பு தப்பா போட்டு கொடுக்குறேன் இரு..நானெல்லாம் குழந்தை மாதிரி..நான் சொன்னா ஜட்ஜே நம்புவாரு தெரிஞ்சுக்கோ..”
“அம்மா தாயே தெரியாம பேசிட்டேன் பெரிய மனசு பண்ணி என்னை விட்டுரும்மா..உனக்கு புண்ணியமா போகும்..”
“ம்ம் அது..போ போ போய் அப்பா அம்மாகிட்ட பேசி சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடு மகனே..”
“சீக்கிரமே கணவன்மார்கள் சங்கத்துல சேர்ந்துக்கோ ஆத்வி எவ்ளோ கஷ்டம் இருக்குனு அப்போ தான் புரியும்..”
“ஆஹான்..இப்போ வீட்டுக்கு வாங்க கஷ்டத்துல ஒண்ணு ரெண்டு சேம்பில் காட்றேன்..டேய் ஆத்வி பையா நீ கிளம்பு நா உங்க மச்சானை கொஞ்சம் கவனிக்க வேண்டியது இருக்கு..அப்பறமா ரேஷ்க்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லிடு டா..பை..”,என்றவள் அப்போதே ஜெயந்தை ஒரு வழியாக்க ஆரம்பித்திருந்தாள்.
தொடரும்...