இப்போ இந்த வேலைக்காரம்மா.."
"பாடி கார்டா.. ஏன் சொல்ல மாட்டீங்க.. அத்தை மும்பைக்கு போனதும், நம்ம ரெண்டுப்பேரும் தானே, நானே பார்த்துப்பேன்னு சொல்லியும் கேட்காம நீங்க தானே இந்த வேலைக்காரம்மாவை வேலைக்கு வச்சீங்க.."
"நீ என்னோட மனைவியா எல்லா பாத்திரத்தையும் செய்யணும்னு எனக்கு ஆசை தான், அதுக்காக உன்னை வேலைக்காரி போல வீட்டில் இருக்க வைக்க நினைக்கல.. அதான் அவங்களை வேலைக்கு போட்டேன்.."
"நம்ம வீட்டு வேலையை செய்றதில் என்ன வேலைக்காரின்னு சொல்றது, நீங்களும் என்னை ஆஃபிஸ்க்கு வரச் சொல்லிக்கிட்டு தான் இருக்கீங்க.. எனக்கு தான் இதெல்லாம் உங்களுக்காக செய்யணும்னு ஆசை.."
"ஆனாலும் எனக்கு உறுத்தலா இருக்கே, நாம ரொம்ப நாள் கழிச்சு சேர்ந்திருக்கோம், உன்னை ஹனிமூன் கூட கூட்டிட்டு போகல.. அஜய் சுஜனாவை கூட்டிட்டு ஹனிமூன் போனதால, எனக்கு ஆஃபிஸ்ல நிறைய வேலை.. அதான் உன்னை கவனிக்காம நீ தனியா ஃபீல் செய்வியோன்னு தோனுது.."
"நான் இப்போ பழைய யாதவி இல்ல.. இப்போ நான் யாதவி விபாகரன். ஒரு மனைவியா உங்க கஷ்டத்தை புரிஞ்சிக்காம இருப்பேனா? நான் எந்தவிதத்திலும் தனியா ஃபீல் பண்ணல.. எப்போதும் நிறைவா தான் உணருகிறேன்.. எல்லோருக்கும் கடவுள் வரம் கொடுப்பார்.. ஆனா எனக்கு கடவுளே வரமா கிடைச்சதா தான் தோனுது.."
"போதும் போதும் கடவுள் ரேஞ்ச்க்கெல்லாம் என்னை உயர்த்தி பேசாத.. நானே செம ப்ளானோட வந்திருக்கேன்.."
"எங்கேயாச்சும் வெளிய போக போறோமா?"
"இல்ல இப்போதிலிருந்தே நாம பெட்ரூம்ல ஹனிமூன் கொண்டாடப் போறோம்.. அதுக்கு தானே சீக்கிரம் வந்தேன்.."
"உங்களை.. நான் இன்னும் சமையலை முடிக்கவே இல்லை.."
"இதுவரை செஞ்சதே போதும், இருப்பதை வச்சு அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம்.. இப்போ வா.." என்று அவளை தூக்கிக் கொள்ள, அவளுமே வெட்கத்தோடு அவனை கட்டிக் கொண்டாள்.
தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்!!
இதுவரை இந்த கதையை படித்து கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட வாசகர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள். இருந்தாலும் இந்த கதைக்கு கருத்துக்கள் குறைவு தான், அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை உங்கள் கருத்துக்களுக்கு நான் பதில் போடாதது கூட காரணமாக இருக்கலாம்.. ஆனால் அதற்கான நேரம் என்னிடம் இல்லை. என்னுடைய அடுத்த கதைக்கு சரியாக பதில் போட முயற்சிக்கிறேன். இப்போது கதை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் வாசகர்களான உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். விரைவில் இன்னொரு கதையோடு உங்களை சந்திக்க வருகிறேன் நன்றி.
சுபம்
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}