ப்ரித்விக்கோ என்ன மாதிரியான வீரம் இது என்ற பிரமிப்பு.
ஹடில்காடி போர் பற்றிய காட்சிகள் வரும்போது ராணாவின் தளபதி அவரைப் போல் வேடமணிந்து போரில் ஈடுபட்டதைப் பார்த்து, கிருத்திகா தன்னை அறியாமல்,
“என்ன ஒரு தியாகம். இந்தப் போரில் தோற்ற போதும் நம் தளபதியின் தியாகம் இன்றளவும் போற்றப்படுகிறது. இல்லையா இளவரசே?” என்று ராணி கிரண் தேவியின் குரலிலும், அப்போதைய மேவார் மொழியின் சாயலில் கேட்க, அதே மொழியில் ப்ரித்வியும்
“தியாகமும், வீரமும் , தேசப் பற்றும் நிறைந்தவர்கள் நம் மேவார் இன மக்கள் தேவி. ஆகையால் இதில் எந்த வியப்பும் இல்லை “ என்று பதில் கூறினான்.
பேசி முடித்த பின் தான் என்ன பேசினோம் என்றே யோசித்தார்கள் இருவரும். சற்று சந்தேகமாகவே
“ஏதாவது கேட்டாயா கிருத்திகா ?” என்று ப்ரித்வி கேட்க, கிருத்திகாவும் சந்தேகமாகவே
“இல்லையே பாஸ்” என்றாள்.
மீண்டும் திரையில் தங்கள் பார்வையை பதித்தனர் இருவரும். ராணாவின் சுதந்திர வேட்கைக்கு காரணமான இருபதாயிரம் ராஜபுத்திர பெண்கள் ஒன்றாகத் தீக்குளித்த சம்பவம் திரையில் காட்டப்பட , கிருத்திகா கண்களில் கண்ணீர் விழ எழுந்து வெளியே சென்று விட்டாள்.
கிருத்திகா சென்றதைக் கவனித்த ப்ரித்வியும் வெளியே சென்று அவள் எங்கே என்றுப் பார்க்க, கிருத்திகா ராணாவின் சிலை அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து இருந்தாள். அருகில் சென்றுப் பார்க்கும் போது தான் அவளின் அழுகையைத் தெரிந்து கொண்டான் ப்ரித்வி.
சட்டென்று அவள் அருகில் அமர்ந்து;
“கிருத்திகா , என்ன ஆச்சு?” என்றுக் கேட்க, ப்ரித்வியைக் கண்ட பின் அவளின் அழுகை இன்னும் கூடியது.
“கிருத்திகா , ரிலாக்ஸ். ஏன் அழற? ஏதாவது சொல்லு. உடம்பு சரி இல்லையா?”
கிருத்தி இல்லை என்று தலையாட்டவும்,
“பின்னே, என்ன?” என்று கேட்டான்.
“அந்த வீடியோ பார்த்ததும் அழுகையா வருது.” என்றாள்.
“எந்த வீடியோ?” என்று யோசித்தவன், “ஒஹ் . அந்த ஸ்லைட் ஷோவா. அது முன்னே நடந்தது நமக்குத் தெரியனும்னு போட்டுக் காட்றாங்க. அவ்ளோ தானே. இப்போ அப்படி எல்லாம் இல்லையே?” என்றான்.
“எப்போ நடந்து இருந்தாலும், எத்தனை உயிர்? அதிலும் அத்தனைப் பேரும் தீயில் விழறாங்க.