“ஜீவி ஏன் இப்படி உக்காந்துருக்க?”
“மாம்ஸ்..உலகத்துல பத்து பதினைஞ்சு ப்ரெண்ட் இருக்குறவனெல்லாம் சந்தோசமா நிம்மதியா இருக்கான் ஆனா இரண்டு பேரை ப்ரெண்டா வச்சுருக்குற எனக்கு மட்டும் ஏன் மாம்ஸ் இப்படியெல்லாம் நடக்குது?”
“என்ன ஜீவிக்குட்டி காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா?இன்னைக்கு என்ன பிரச்சனை?”
“உள்ளூர் மாமனார்க்கே ஆத்வி நிலைமை பரிதாபமா இருந்தது.இந்த ரேஷ்க்கு மலையாள ஏட்டன்..ஓவரா பேசினா ஜண்ட மேளம் வாசிக்குற மாதிரி வாசிச்சுற மாட்டாரு..”
“என்ன ஜீவி உளர்ற??”,என்றவனிடம் தன் மொபைலைக் காட்ட அவனும் இப்போது ஜீவிகாவைப் போலவே முழித்தான்.
“இது என்ன டீ புது பஞ்சாயத்து?”
“ம்ம் ஆத்வி கல்யாணத்துல இதுங்க போட்ட ஆட்டத்துக்கே இதெல்லாம் நடக்கும்..கொஞ்சமா அட்டூழியம் பண்ணாங்க..அதுவும் இந்த எப் பில பாதி பேருக்கு மேல அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி புள்ளையே இருக்கு ரேஞ்சுக்கு விளக்கு விளக்குனு விளக்கிருப்பாங்க..
என்ட அம்மே..என்னால சேட்டன்கிட்ட எல்லாம் அடி வாங்க முடியாது மாம்ஸ்..”
“என்ன ஜி இந்த நேரத்துலயும் விளையாடிகிட்டு இருக்க..என்ன பண்றது இப்போ?”
எனும்போதே ரேஷ்வா மீண்டும் அழைத்திருந்தான்.வேகமாய் போனை ஆன் செய்தவள்,
“ஏடா ரேஷ் ஆ பெண்ணுகுட்டி வீட்டில் மாட்டிப் போயி..நீ போய் மற்றொரு வல்ய சுந்திரியை கூட்டிக்கொண்டு ஓடு...போய்கோ டா போய்கோ..”
“ஐயோ ஜி ஏற்கானவே செம கடுப்புல இருக்கேன் வந்தேன்னா உன் மண்டைக்கு நான் பொறுப்பு இல்ல..”
“ஐயோ ச்சச பயத்துல தெரியாத பாஷை கூட சரளமா வருது ரேஷ்..ரினி செல்லம் வீட்டுல மாட்டிருச்சு போல..”
“அவளா??அவ என்ன தப்பு பண்ணிணா மாட்றதுக்கு?”
“ம்ம் ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான் யா ஹீரோ..உங்களை லவ் பண்றாளே அதுக்குப் பேரு என்னவாம்?”
“ஜி!!”
“ரேஷ் அவ தான் மெசெஜ் பண்ணா கேரளால இருக்காளாம்..ப்ரே பார் மீனு போடுறா என்னை என்ன பண்ண சொல்றீங்க..ரொம்ப டென்ஷனா இருக்கு எனக்கே அதான் இப்படி உளறிட்டு இருக்கேன்.”