இதெல்லாம் மீடியாகாரங்களுக்கு புதுசா..எப்பவும் எதாவது அவங்களே நியூஸா போடுவாங்கனு நாங்க சமாதானம் சொன்னாலும் அந்த வீடியோ பார்க்குற எல்லாருக்கும் எங்களால சமாதானம் சொல்ல முடியாதே.
அவன் ப்ரெண்ட்ஸ் வேற பத்தாததுக்கு எதேதோ சொல்ல என் பையன் ரொம்ப டென்ஷன் ஆய்ட்டான்.ரினிஷாவை பார்க்க சென்னை போகப் போறதா சொன்னவனை சமாதானப்படுத்தி நான் தான் ரினிஷாவை இங்கே வர சொன்னேன்.
வந்து அவளும் எந்த ஒளிமறைவும் இல்லாம விஷயத்தை எங்ககிட்ட சொல்லிட்டா.முதல்ல எங்களுக்கு கொஞ்சம் ஷாக் தான் ஆனாலும் அவ சந்தோஷம் தான் முக்கியம்ங்கிற பக்குவம் இருந்தது.ஆனா என்னனு தெரில எல்லாத்துக்கும் அவளுக்கு சப்போர்ட் பண்றவன் இந்த விஷயத்துல அவளை எதிர்த்து நிக்குறான்.
அவர் பேசிய விதத்திலேயே மறைமுகமாய் தன் சம்மதத்தை தெரிவித்திருக்க ரேஷ்வாவிற்கு சற்றே நிம்மதியாய் இருந்தது.ரினிஷாவைப் பார்த்தவன் அப்போதும் அவள் குனிந்த தலை நிமிராமலே அமர்ந்திருக்க மனநிலை உணர்ந்தவனாய் அவளிடம் பேசிவிட மனதினுள் துடித்துக் கொண்டிருந்தான்.
“இப்போ அவர் வீட்ல இல்லையா நான் வேணா அவர்கிட்ட..”
“இல்லை வேலை விஷயமா வெளியூர் போய்ருக்கான்.ரினிஷாவுமே இன்னைக்கு சாய்ந்திரம் சென்னை கிளம்புறதா இருந்தது அதுகுள்ள நீங்களே வந்துருக்கீங்க..”
“ஓ..எந்த பிரச்சனையா இருந்தலும் சம்மந்தப்பட்டவங்க பேசிட்டாலே பாதி சரியாய்டும்.அதனால தான் உடனே கிளம்பி வர வேண்டியதா போச்சு..”
“..”
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்..”
“நான் சம்மதம்னு சொல்லவே இல்லையே”,என்றார் புன்னகையோடே..
லேசாய் சிரித்தவன்,”இல்லனா இந்நேரம் நான் ரிட்டன் ப்ளைட்க்காக ஏர்போர்ட்ல இருந்துருப்பேனே..”
“ஆனா ரேஷ்வா என் பொண்ணோட சந்தோஷம் தான் எனக்கு ரொம்பவே முக்கியம்.அந்த ஒரு காரணமும் அவ மேல இருந்த நம்பிக்கையும் தான் உங்களை அவ விரும்பினது சரியா இருக்கும்ங்கிற நம்பிக்கையை எனக்கு கொடுத்துருக்கு..சோ…”
“புரியுது அங்கிள் இது நான் ரினிஷாகிட்ட சொன்னதுதான்.அவளோட முழு சந்தோஷத்துக்கும் நான் பொறுப்பு.அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.”