ப்ரிதிவி மீண்டும் “ஹாய் “ எனவும்,
“ஹாய் பிரி... பாஸ்” என்றாள். வழக்கமான பிரின்ஸ் வார்த்தையைத் தவிர்த்ததைப் புரிந்து கொண்டான். கண்டு கொள்ளாமல்,
“என்னாச்சு, சைலென்ட் சுந்தரியா இருக்க? “
“அப்படில்லாம் ஒன்னுமில்லையே.பிரெண்ட்ஸ் கிட்டே பேசிட்டுத் தானே இருந்தேன்”
“ஹூம். வழக்கமா யாரையாவது கேலி பண்ணிட்டு இருப்பியே. அதுதான் மிஸ்ஸிங்”
அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் அவள் முழித்தாள். பதில் சொல்வதைத் தவிர்க்கும் முயற்சியாக தண்ணீர் குடித்தாள்.
அந்த பாவனையை சிறு ரசிப்புடன் பார்த்தவன், அவளைப் பேசவைக்க முயன்றான்.
“உன்னோட பிரின்ஸ் என்ன சொல்றார்? “ எனவும், குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரைக்கேற இருமினாள்.
“ஹேய்.. பார்த்து .. பார்த்து” என்று ப்ரிதிவிக் கூறவும், தன்னைச் சமாளித்துக் கொண்டாள். தற்போதும் அவள் மெளனமாக இருக்கவும்,
“என்ன ஆச்சு கிருத்தி? நேற்றுக் கனவு ஏதும் வரவில்லையா? இல்லை கனவில் ஏதும் விரும்பத் தகாதது நடந்ததா?”
“அப்படி இல்லை. ஆனால் .. “ என்றுத் தயங்கினாள்.
“ஹ்ம்ம். சொல்லு.”
இன்னும் தயங்கிய படி “நான் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் அல்லவா?” என்றுக் கேட்க,
“தவறாக எடுக்க என்ன இருக்கிறது. நீ ஏற்கனவே என்னிடம் கனவைப் பற்றிச் சொல்லி இருக்கிறாய். அதன் தொடர்ச்சி தானே. சொல்” என்றான்.
“கனவில் வந்த இளவரசர் எப்படி இருப்பார் என்று கேட்டீர்கள் அல்லவா?”
“ஆமாமா”
“அதைப் பற்றித் தான் உங்களிடம் சொல்ல ஒருமாதிரி இருக்கிறது”
அவளின் மிகுந்த யோசனையைப் பார்த்தவன்,
“கிருத்தி, நீ முதலில் நேற்றையக் கனவைப் பற்றிச் சொல்லு. பிறகு இளவரசர் பற்றிப் பார்க்கலாம்” என்றுக் கூறவும், ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தாள்.
முதல் நாள் இரவு , ப்ரித்விக் கிண்டலுடன் கூறியதை ரசித்தபடி கிருத்திகா உறங்க ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் கனவு தொடர்ந்தது.
பிகானரிலிருந்து புறப்பட்டப் பின் ராணி கிரண் தேவி, இளவரசர் ப்ரித்விராஜன்