(Reading time: 11 - 22 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

இப்ப தேவலாம்ணாஎன்று உரிமையோடு பதில் சொன்னார் சிவகாமி.

மாப்பிள்ளை இல்லையா வீட்டில். அவருக்கும் ஒரு நன்றி சொல்லனும்என்றார் சிவகாமி.

மறுபடியும் மறுபடியும் நன்றி சொல்லி எதுக்கு பிரித்து பேசுறீங்கஎன்றார் பானுமதி.

அவன் இன்னைக்கு காலையில் தான், photoshoot விஷயமா கிளம்பி China வரைக்கும் போயிருக்கான். ஏதோ புது படத்துக்கு location பார்க்கனுமாம்என்று பதில் கூறினார் நாகராஜன்.

ஓ அப்படியா. எப்பா வருவாரு னு தெரியுமா சம்பந்திஎன்றார் சங்கர்.

“Director சங்கர் சார் படம். லொக்கேஸன் பாக்குற விஷயமாகத்தான் அவர் கூட போயிருக்கான். எப்ப வருவா னு ஏதும் சொல்ல. என்ன விஷயம் சம்பந்திஎன்று கேட்டுவிட்டு, “நானும் கேட்க மறந்துட்டேன், மருமக எப்படி இருக்கா, நல்லா இருக்காலாஎன்று நிலாவை பற்றி விசாரித்தார் நாகராஜன்.

நல்லா இருக்கா சம்பந்தி. அன்னைக்கு மாப்பிள்ளைக்கு ஒரு thanks சொல்லிட்டு வந்துடுரேனு கீழே வந்த அதுகுல்ல மாப்பிள்ளை கிளம்பிட்டாரு போலஎன்று கூறினார் சங்கர்.

அங்க ஆஸ்பத்திரில கொஞ்ச நேரம் கூட வண்டி நிறுத்த விடலையாம். அதான் உடனே கிளம்பிட்டேனு சொன்னான்என்று அதற்கு பதில் அளித்தார் நாகராஜன்.

சிறிது நேரம் எதுவும் கூறாமல் சங்கரும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் மௌனத்தில் இருந்து அவர்கள் ஏதோ கூற தயங்குகிறார் என்று புரிந்து கொண்டார் நாகராஜன்.

என்ன சம்பந்தி ஏதும் பிரச்சனையா. எதுவா இருந்தாலும் சொல்லுங்கள்என்றார் நாகராஜன்.

அது இல்ல சம்பந்தி, எங்க அம்மாவுக்கு நிலான உயிரு. சின்ன வயசுல இருந்தே அவள பார்த்துப் பார்த்து வளத்தது அவங்கதான். மத்த எல்லா பேரக் குழந்தைகளைவிடவும் நிலா மேல ஒரு தனி பிரியம் அவங்களுக்குஎன்று கூறி நிறுத்தினார் சிவகாமி.

யாருக்குத்தான் நிலாவ பிடிக்காது. ஒன்னு ரெண்டு தடவை பார்த்த எங்களுக்கே அவள விட்டுப் பிரிய மனம் வரலஎன்று பானுமதி நிலா மேல் இருக்கும் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

அதை கேட்க சங்கருக்கும் சிவகாமிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

அத்தைக்கு இப்போ திடீர் திடீர்னு உடல் நிலை சரியில்லாமல் போரதால அவங்க ரெம்ப

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.