சொல்றதுனே தெரியலா. ரொம்ப நன்றி” என்றார் சங்கர்.
“ஐயோ இதுக்கு எதுக்குணா நன்றி எல்லாம். நிலாவ நாளைக்கே எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரதுனாலும் எங்களுக்குச் சந்தோஷம் தான். அதுதான் இன்னும் நமக்கு 30 நாள் இருக்குல, விஷேஷத்தைச் சிறப்பா செஞ்சிடலாம்” என்றார் பானுமதி.
சிறிது நேரம் அவர்களோடு கல்யாண வேலை பற்றிப் பேசிவிட்டு சிவகாமியும் சங்கரும் விடைப் பெற்றுக் கிளம்பினர்.
அவர்கள் வீடு வந்து சேரும் போது, நிலா வீட்டிற்கு வந்திருந்தாள்.
“என்ன மா ஆஸ்பத்திரிக்கா போயிட்டு வரிங்க. பாட்டி எப்படி இருக்காங்க” என்றாள் நிலா.
“நாங்க சம்பந்தி வீட்டுக்கு போயிட்டு வரோம் மா. உன் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று கூறிக் கொண்டே சிவகாமி சோபாவில் அமர, அருகில் சங்கரும் அமர்ந்தார்.
சம்பந்தி என்று கூறும் போதே நிலாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.
“இருங்கமா நான் குடிக்கத் தண்ணீர் எடுத்துட்டு வரேன்” என்று சமையல் அறை பார்த்து நடந்தாள். அவள் மனதில் “இப்போ என்ன குண்ட போட போறாங்கனு தெரியலையே. இவங்க முக்கியமான விஷயமுனு சொன்னாலே எனக்கு பக்குனு ஆகுதே” என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து சிவகாமியிடம் கொடுத்தாள்.
சங்கர் யாரிடமோ தன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். “ஆமா நாங்க பேசிட்டோம். அவங்களும் அதற்குச் சம்மதம் சொல்லீட்டாங்க. இன்னும் 30 நாள் கூட இல்ல. அதனால வேலை எல்லாம் சீக்கிரம் ஆகனும்” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டு இருந்தார்.
நிலா ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். தண்ணீர் குடித்துவிட்டு நிலாவைப் பார்த்த சிவகாமிக்கு அவள் குழப்பம் புரிந்தது.
“நிலா பாட்டி இப்போ நல்லாதாண்டி இருக்காங்க. ஆனால், டாக்டர் எல்லாம் என்னனமோ சொல்றாங்க. அதுலதான் அவங்க மட்டும் இல்ல, நாங்க எல்லாரும் பயந்து போய் இருக்கோம்” என்று நிலாவை பார்த்து சிவகாமி கூற, நிலா பொறுமையாக அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அம்மா அது எல்லாம் பாட்டிக்கு ஒன்னும் இல்லமா. இந்த டாக்டர்ங்க சும்மா பயபடுத்துறாங்க” என்றாள் நிலா. அவ்வப்போது போனில் பேசும் தன் தந்தையையும் பார்த்துக் கொண்டு அவர் என்ன பேசுகிறார் என்று கவனித்து கொண்டே.
“அது எங்களுக்கும் புரியிது நிலா. ஆனா பாட்டி ரொம்ப பயந்து போயிருக்காங்க. உன்னோட உன் கல்யாணத்தை எப்படியாவது பார்த்துடனும்னு சின்ன குழந்தை மாதிரி