இப்படி கூட்டி வந்து கஷ்டத்தில் வைத்திருக்கிறாயே.." என்று தந்தையிடம் அவர் கூறியதே இல்லை,
"ஒழுங்கா வேலைக்கு போ.. நல்ல ஆளுங்க கூட பழக்கம் வச்சிக்க.. ரொம்ப குடிச்சு உடம்பை கெடுத்துக்காத.. நமக்கு ஒரு பொண்ணு இருக்கா.. அவளுக்கு கல்யாணம் செய்ய பணம் வேண்டாமா?" இப்படித்தான் தந்தையிடம் புலம்பி பார்த்திருக்கிறாள்.
"ஏன் ம்மா.. நம்ம எத்தனை கஷ்டப்பட்டோம்.. அப்போல்லாம் பாட்டிக்கிட்ட இல்ல மாமாக்கிட்ட உதவி கேட்கணும்னு நீ நினைக்கவேயில்லையா?" என்று நித்யா வஞ்சியிடம் கேட்கும் போது,
"உங்கப்பா நல்லப்படியா தொழில் செஞ்சுக்கிட்டு இருந்தவர் தான், என்னை நல்லா வச்சிருப்பாருன்னு தான் அவருக்கு என்னை கட்டிக் கொடுத்தாங்க.. அவரும் ஆரம்பத்தில் என்னை நல்லா தான் பார்த்துக்கிட்டார்..
ஆனா கல்யாணத்துக்கு பிறகு கூட சில பேரை கூட்டு சேர்த்து தொழிலை கவனிக்க போய், அவங்க கவனக் குறைவால் தொழில் நஷ்டத்தை காட்ட ஆரம்பிச்சது..
உங்கப்பா நண்பர்கள்னா உயிரையே கொடுப்பாரு.. அதேபோல கௌரவம் பார்ப்பவரும் கூட, தொழில் நஷ்டத்தை சரி செய்ய உங்க மாமாக்கிட்ட பணம் கேட்டாரு.. அதுவும் கடனா தான்,
கடனா எதுக்கு என்னோட தங்கச்சிக்கு சும்மாவே தருவேன்.. ஆனா அந்த கூட்டாளிங்களை விட்டு தனியா தொழில் நடத்துங்க.. அதுவும் லாபம் என்னோட தங்கச்சி பேர்ல தான் இருக்கணும்னு, உங்க மாமா கண்டிஷன் போட்டாரு..
" என்னோட பொண்டாட்டி பேர்ல செய்றது நானே செய்வேன்.. நீ என்ன சொல்றது.. நீ பணம் தரேன்னு தானே இப்படியெல்லாம் பேசற.. உன்னோட பணமே வேண்டாம்னு சொல்லி இருந்த சொத்து பத்தை வித்து கடனை அடைச்சவரு, குழந்தையா இருந்த உன்னையும் என்னையும் கூட்டிக்கிட்டு போயிட்டாரு..
ஆரம்பத்தில் நல்ல வேலைக்கு போய் நல்ல சம்பாதியம்னு நம்மள நல்லா தான் பார்த்துக்கிட்டாரு.. ஆனா கூட சேர்ந்த கூட்டாளிங்க சரியில்லாம அவர் அப்படியே மாறிப் போயிட்டாரு.. நம்மள நல்லா வசதியா வச்சுக்கலன்னாலும், நம்ம மேல அளவுக்கதிகமா அன்பும் பாசமும் வச்சிருப்பாரு.. இது நான் சொல்லி தான் உனக்கு தெரியணும்னு இல்ல..
கஷ்டப்பட்றோமேன்னு உன்னோட பாட்டிக்கிட்டேயோ, இல்ல மாமாக்கிட்டேயோ உதவின்னு போய் நின்னா, அவங்க செய்யமாட்டேன்னுல்லாம் சொல்ல மாட்டாங்க தான், ஆனா என்மேல இருக்க பாசத்தில் உங்கப்பாவை ஏதாவது சொல்லிட்டா, அவரால் தாங்கிக்க முடியாது.. அவர் வருத்தப்பட்றதை என்னாலயும் பார்க்க முடியாது..
எங்க இருந்தாலும் நான் நல்லா இருப்பேன்னு அவங்க நினைச்சிக்கிட்டு இருப்பாங்க.. அது