முதலில் அவனுடனான தனிமை அவளுக்கு படப்படப்பை கொடுக்க, அடுத்து அவன் இயல்பாக பேசும்போது கொஞ்சம் அது குறைந்திருந்தது. ஆனால் அடுத்து என்ன? என்ற கேள்வியே, அவளுக்கு இன்னும் படப்படப்பை கொடுக்க, அவன் சிறிது நேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் இதமாகவும் இருந்தது.
இப்போது அவன் உறங்க சொல்லிவிட்டு செல்ல, அது கொஞ்சம் ஏமாற்றத்தையும் கொடுத்தது. இன்று அதற்கு மேல் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதால் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
மொத்தத்தில் ஏற்கனவே குழம்பியிருந்தவளுக்கு, "கார்த்திக் மாமா ஏன் போயிட்டாங்க.. ஒருவேளை என்னை பிடிக்கலையா? அதான் போயிட்டாங்களா?" என்று சிந்தித்து இன்னும் குழப்பிக் கொண்டாள். பின் அப்படியே மெத்தையில் படுத்தவள், தன்னையறியாமல் கண்ணசந்தாள்.
பின் உறக்கம் கலைந்து எழுந்து பார்க்க, அங்கே கார்த்திக் இல்லை. "கார்த்திக் மாமா இன்னுமா வேலை பார்க்கிறாங்க.. தூங்கவே வரலையா?" என்று நினைத்தவள், பின் மணியை பார்க்க, அது ஐந்து என்று காட்டியது.
"மணி அஞ்சாகுது.. இன்னும் மாமா ரூம்ல என்ன செய்றாங்க.." என்றவள், எழுந்து கார்த்திக் சென்ற அறைக்கு சென்று பார்க்க, கார்த்திக் அங்கேயே சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்தான்.
"ஏன் மாமா இங்கேயே தூங்கறாங்க.. என்கூட படுக்க பிடிக்கலையா? என்கிட்ட சொல்லியிருந்தா நான் தரையில் படுத்திருந்திருப்பேனே.. பாவம் அவங்க உயரத்துக்கு சோஃபாவில் குறுகி படுத்திருக்காங்க.." என்று வாய்விட்டே கூறியவள்,
"மாமாவை எழுப்பி பெட்ல படுக்க சொல்வோமா.." என்று நினைத்து,
"வேணாம் இப்போ நல்லா தூங்கறாங்க.. நைட் வேலை முடிச்சிட்டு எப்போ படுத்தாங்கன்னு வேற தெரியல.. இப்போ எழுப்பினா அவங்க தூக்கம் கலைஞ்சிடும்.." என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டு, குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
"இனி நினைக்கிற நேரத்தில் குளிக்கறதை விட்டுட்டு, காலையில் எழுந்ததுமே குளிச்சிட்டு தான் வெளிய வரணும்.. அதுவும் தலை குளிச்சிட்டு வரணும்.." என்று வஞ்சி நேற்று இரவே தனியாக கூப்பிட்டு சொல்லியிருந்தார்.
அவர் எதுக்காக சொல்கிறார் என்பது அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. ஆனால் நேற்று இரவு தான் ஒன்றும் நடக்கவில்லையே, அதனால் தலை குளிப்பதற்கு ஒன்றும்