மாட்டீங்க இப்போ கூட நம்மளை வாட்ச் பண்ண அண்ணா யாரையாவது அனுப்பிருப்பாங்க.எவ்ரி ஆப் அன் அவர் நம்மளை பத்தின அப்டேட் அண்ணாக்கு போய்ட்டே தான் இருக்கும்.”
“ஓ…மே பி உங்களோட பாதுகாப்புக்காக தான இதெல்லாம்..”
“பாதுகாப்பு முக்கியம் தான் ஆனா அதையும் தாண்டி நம்ம ப்ரைவஸினு ஒண்ணு முக்கியம் இல்லையா..”
“ம்ம் புரியுது..”
“ஆமா க்கா..ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் ஆரம்பத்துல யாரும் அவ்வளவா பேசவே மாட்டாங்க அப்பறம் நாங்க வீட்ல வந்து அழுது ஆர்பாட்டம் பண்ணி தான் எந்த கண்காணிப்பும் இல்லாம போக பெர்மிஷன் வாங்கினோம்.
அதுக்கு அப்பறம் தாத்தாவோட இறப்பு மறுபடியும் ஜெயில் வாழ்க்கை தான்..நாங்களும் அநாவசியமா வெளியே போறதில்ல.யாரும் தேவையில்லாம உள்ளே வரதும் இல்ல.
ஆனா நாங்களே இப்படி புலம்புறோம்னா அண்ணா எல்லாம் என்ன சொல்றது.மொத்த குடும்ப பொறுப்பும் அவர் கையில.ஆபீஸ் பிஸினஸ் வீடு இது தாண்டி ஒண்ணுமே கிடையாது அவர் வாழ்க்கையில.காலேஜ் முடிச்சு எம்பிஏ பண்ணிட்டு பொறுப்பேத்துகிட்டவர் தான் இப்போ வரவும் ஓடிட்டே இருக்கார்.அவரோட தனிப்பட்ட வாழ்க்கைனு அவர் இதுவரை யோசிச்சுருப்பாரானு கூட தெரில.”
“ஆனால் உங்க அப்பா மாமா எல்லாரும் இருக்கும் போது ஏன் மகிழன் அத்தாரிட்டாவா இருக்கணும்?”
“எங்க பெரிப்பா அதாவது மகி அண்ணாவோட அப்பா இறப்பு எங்க தாத்தாவை ரொம்பவே பாதிச்சுடுச்சு..அவரு தான் தாத்தாவுக்கு வலது கை மாதிரி இருந்ததா சொல்லுவாங்க.அப்படிபட்டவரோட இடத்தை வேற யாருக்கும் கொடுக்க தாத்தாவுக்குத் தோணலயாம்.
அதனால அண்ணாகிட்ட தான் எல்லா பொறுப்பும் இருக்கணும்னு உயில் எழுதி வச்சுட்டாராம்.அப்பா மாமா யாரா இருந்தாலும் அவங்க தேவைக்கு பணத்தை எடுத்துக்கலாமே தவிர அண்ணா கையெழுத்து இல்லாம ஒண்ணுமே பண்ண முடியாது.”
“ப்பா இதென்ன அனுமார் வால் மாதிரி ஒரு விஷயத்துக்குள்ள இன்னொன்னுனு வந்துட்டே இருக்கும் போலேயே..”
“என்ன??”
“இல்ல..உங்க தாத்தா உயில் எழுதிட்டாருனா யாரும் எதுவும் சொல்லலயா?பொதுவா சாதாரண