இப்படி தான் என்னை மீறி சில சமயம் கோபம் வந்துடுது.. முடிஞ்ச அளவுக்கு அதை மாத்திக்க முயற்சிக்கிறேன்.. சரியா?" என்றவன்,
"திரும்ப குளிச்ச போல.." என்று அவளைப் பார்த்து கேட்டான்.
"ஆமாம்.. நேத்தே சோஃபாவில் ரொம்ப குறுகி படுத்துக்கிட்டு இருந்தீங்க.. இன்னைக்கு நைட்டும் அப்படியே தூங்கினா உங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு தான்.. போய் குளிச்சிட்டு நைட்டி போட்டேன்..
"என் ஸ்வீட் பொண்டாட்டி.. சாரி டா உன்கிட்ட கோபமா நடந்துக்கிட்டேன்.."
"இருக்கட்டும் மாமா.. நானும் யோசிக்காம தப்பு செஞ்சுட்டேன் இல்ல.. சரி வாங்க, வந்து பெட்ல தூங்குங்க மாமா.."
"தூங்கணுமா.. ஹே பொண்டாட்டி.. நாம தூங்கறதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்.. என்னோட நித்தி புடவையில் ஒரு அழகுன்னா, நைட்டியில் வேற மாதிரி அழகு.. அதனால இனி தூக்கம் வருமா சொல்லு.." என்றவன், அவளை அப்படியே தூக்கிக் கொண்டு படுக்கையை நோக்கிச் சென்று மெத்தையில் மென்மையாக படுக்க வைத்தவன், தன் காதலையும் தாபத்தையும் அவளிடம் காட்ட ஆரம்பிக்க,
ஏனோ அதற்கு முன்பான சூழ்நிலை காரணமா என்று தெரியவில்லை, அவனது இந்த அரவணைப்பை அவள் மனம் விரும்பினாலும், அவன் காதலுக்கும் தாபத்துக்கும் அவள் ஈடு கொடுத்தாலும், அவளுக்கு அந்த நேரம் இருந்தது வெட்கமா, பயமா எது என்று அவளுக்கே தெரியவில்லை, ஏனோ அந்த கூடல் நேரத்தில் அவள் கண்களை இறுக மூடியப்படியே இருந்தாள்.
இருவரும் கூடி களைத்த பின், நித்யா கார்த்திக்கின் மார்பில் தலை வைத்து படுத்திருக்க, அவளை சேர்த்து அணைத்தப்படி படுத்திருந்தவன், "தேங்க்ஸ் டீ என் ஸ்வீட் பொண்டாட்டி.." என்று இன்னும் அவளை இறுக்கி அணைத்தவன்,
"நாம ஹனிமூன் போலாமா நித்தி.." என்றுக் கேட்டான்.
ஏனோ வெட்கத்தில் அவளுக்கு பேச்சு வராமல், "ம்ம்" என்று மட்டும் அவள் உம் கொட்டினாள்.
"எங்க போகலாம்னு நீயே சொல்லு நித்தி.." என்று அவன் கேட்டதும்,
"ஊட்டி போகலாமா?" என்றுக் கேட்டாள்.
"அய்யோ எத்தனையோ முறை பார்த்தாச்சு.." என்று அவன் சொன்னதும்,
"அப்போ கொடைக்கானல்.." என்றதற்கு,
"அதுவும் தான் நிறைய முறைப் பார்த்தாச்சு.." என்று அவன் கூறினான்.
"அப்போ ஏற்காடு.." என்று அவள் சொல்ல,