Page 6 of 6
எங்க பாட்டி சொல்லும்…. அப்போல்லாம் கடுகையும் எள்ளையும் கலந்து வைத்து பிரிக்க சொல்லுவாங்களாம்”
“கண்ணுக்கு நல்லது தம்பி. நீ இதை செய்தால் ப்ரெயின் வேலை செய்யும். நீ படித்து பார்த்து குறிப்பெடுத்து வை. நான் உன்னை கால் பண்றேன்”
‘தண்ணி இல்லாத கிணத்தை தூர் வாரும் வேலையை செய்ய சொல்றீங்களே பாஸ்’ என்று வினய் புலம்பினான்.
அவன் செய்யப் போகும் வேலையினால் கிணற்றில் ஒரு பூதம் கிளம்பப் போகிறது என்பது அவனுக்கு அப்போது தெரியாது. அது தெரிய வரும்போது அங்கே நடந்த மரபணு ஆராய்ச்சியில் நடந்த ஒரு மாபெரும் தவறு தெரிய வரும். லெட்ஸ் ஸீ!
தொடரும்