தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 09 - சித்ரா. வெ
ஒரு வழியாக பிரச்சனை என்னவென்று கண்டுப்பிடித்து அதை சரி செய்துவிட்டு அப்போது தான் ஆசுவாசமாக கார்த்திக் தன் அலுவலகத்தில் அமர்ந்தான்.
நேற்று வீட்டிற்கு வந்து நித்யாவிடம் கோப்புகளை வாங்கியது யார்? அதில் அவன் என்ன குறிப்பை திருடிச் சென்றான்? அதனால் அலுவலகத்திற்கு என்ன பிரச்சனை வர காத்துக் கொண்டு இருக்கிறது? இப்படி எந்த கேள்விக்கும் விடை தெரியாமல் இருந்தது.
அதனால் வெகு காலையிலேயே அலுவலகத்திற்கு வந்தவன், அங்கு பணி புரியும் ஊழியர்களோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்தியவன், நேற்று வீட்டில் நடந்ததையெல்லாம் கூறி, அந்த புகைப்படத்தையும் காட்டினான்.
அதில் இருப்பவனை யாருக்கும் தெரியாத நிலையில், ஒருவர் மட்டும் அவனை தெரியும் என்று கூறினார். நேற்று வீட்டுக்கு வந்தவன் இவர்கள் நிறுவனத்தின் இன்னொரு கிளையில் வேலைப் பார்த்தவன், அதுவும் சிறிது நாட்கள் தான், தனிப்பட்ட முறையில் அவன் ஒழுக்கமற்றவனாக இருந்ததால், அவனை பணியிலிருந்து நீக்கிவிட்டனர்.
அந்த கிளையின் நிர்வாக பொறுப்பை வேறொரு நம்பகத்தக்க உறவினர் கையில் ஒப்படைத்திருப்பதால், அதுவும் அவன் சில நாட்கள் மட்டும் தான் அங்கு பணி புரிந்திருக்கிறான் என்பதால், கார்த்திக் மற்றும் ஞானசெல்வத்திற்கு அவனை அடையாளம் தெரியவில்லை. இப்போது அவனை கண்டுப்பிடித்து சொன்ன ஊழியர், அந்த கிளையில் தான் முதலில் வேலை பார்த்ததால் அவனை அடையாளம் கண்டு கூறினார்.
அடுத்து உடனே அவனை கண்டுப்பிடிப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்தது. தங்கள் நிறுவனத்தில் வேலை செய்ததால் அவனது தகவல்களை சேகரித்து காவல்துறையிடம் அதை சமர்ப்பித்து, பின் காவல் துறையினர் அவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு, அவன் தலைமறைவாகி, பின் அவர்கள் குடும்பத்தாரை மிரட்டி விசாரித்து, அதில் பயந்து அவர்கள் அவன் பதுங்கியிருக்கும் இடத்தை கூற, அவனை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பின் அவனை விசாரிக்க, முதலில் எதையும் சொல்லாமல் மறைத்தவன், பின் சில பல அடிகள் வாங்கிய பின், உண்மையை கூறினான்.
அவனை அனுப்பியது கார்த்திக் நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் நிறுவனம். இருவருமே ஒரு புது ப்ராஜக்ட்க்கிற்காக விண்ணப்பித்திற்க, அந்த ப்ராஜக்ட் தங்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக நேர்மை தவறி கூட செய்லபட இருந்த நிறுவனம், காவல் துறையிடம் மாட்டியிருக்கும் அவன், அந்த நிறுவனத்திற்கு வேலைக் கேட்டு சென்றிருக்க,
அவன் முன்பு கார்த்திக்கின் நிறுவனத்தில் வேலை செய்ததை அறிந்து, தங்கள் நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால், அவன் சில காரியங்கள் செய்தாக வேண்டும்