"அப்படி நான் பேசினதை கூட கேட்காம என்ன யோசனை?" என்றுக் கேட்க,
"யோசனையெல்லாம் இல்ல மாமா, இந்த சின்ன குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்படி பசங்க சறுக்கி சறுக்கி விளையாடுறாங்கல்ல, இப்படி நானும் சின்ன வயசுல ஒருமுறை விளையாடியிருக்கேன். ஆனா பின்னாடி ஒரு பையன் வேகமா சறுக்கிக்கிட்டே வந்து என்னை தள்ளி விட்டானா? அதிலிருந்து இதில் ஏறணும்னா எனக்கு பயம், ஆனா விளையாடணும்னு ஆசையாவும் இருக்கும்." என்றாள்.
"நிறைய தீம் பார்க்ல பெரியவங்களே இப்படி சறுக்கி விளையாடல்லாம் இருக்கு, அதுவும் ஸ்விம்மிங் பூலில் விழலாம், ஜாலியா இருக்கும், உன்னை ஒருநாள் கூட்டிட்டுப் போறேன்." என்று அவன் சொல்ல,
"ம்ம் இப்போல்லாம் இப்படி விளையாடல்லாம் ஆசையில்லை மாமா. இப்படி இந்த பிள்ளைங்க விளையாடிக்கிட்டு இருப்பதை பார்த்தாலே போதும், மனசில் இருக்கும் பாரமெல்லாம் இறங்கிடுவது போல இருக்கு." என்று அந்த விளையாடும் பிள்ளைகளை பார்த்துக் கொண்டே கூறியவள்,
"இது எந்த இடம் மாமா? இந்த பார்க் பேர் என்ன? நம்ம வீட்ல இருந்து கிட்டவா? இல்ல தூரமா?" என்றெல்லாம் கேள்விகள் கேட்டாள். அதற்கு அவனும் பதிலளித்தான்.
ஒருவேளை அந்த பூங்காவிற்கு தான் சென்றிருப்பாளோ? என்று யோசித்தவன், வண்டியை பூங்கா இருக்கும் திசைக்கு செல்ல திருப்பினான்.
பூங்காவை சென்றடைந்தவன், வேகமாக காரை பார்க் செய்துவிட்டு பூங்காவின் உள்ளே நுழைந்தான். நித்யா இங்கு இருக்க வெண்டுமென்று மனதில் வேண்டுதல் வைத்தப்படியே, பூங்காவின் ஒரு பகுதி விடாமல் கண்களால் தேடியப்படி அவன் கால்கள் பயணித்துக் கொண்டிருக்க, அதே சிறுவர்கள் விளையாடும் இடத்தில் கன்னத்தில் கை வைத்தப்படி நித்யா அமர்ந்திருப்பதை பார்த்ததும் தான் அவனுக்கு நிம்மதி உருவானது.
அதேசமயம் அவளை காணவில்லை என்று அனைவரையும் கலவரப்படுத்திவிட்டு, இங்கு வந்து ஆற அமர அவள் அமர்ந்திருப்பது ஒருபக்கம் அவனுக்கு கோபத்தையும் வரவழைத்தது.
இங்கு தான் வரப்போவது என முடிவெடுத்தவள், பாட்டி இல்லை அத்தையிடம் சொல்லிவிட்டு தான் வந்தால் என்ன? இல்லை தனியாக அனுப்ப மாட்டார்கள் என்றால், கையோடு அலைலேசியை கொண்டு வந்து இங்கு பூங்காவிற்கு வந்திருக்கிறேன். என்று வீட்டிலுள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம்,
இப்படி ஏதும் செய்யாமல் மற்றவர்களை கலங்கடித்துவிட்டு, அவள் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்ததும், கோபத்தோடு அவள் அருகில் சென்றவன்,