"இப்படி என்னை டென்ஷன் படுத்தி பார்ப்பதில் உனக்கு சந்தோஷமா நித்தி. தப்பு செய்தா கோபப்படுவாங்க, அதுக்காக திட்டினா, இனி அதுபோல செய்யக் கூடாதுன்னு நினைப்பாங்க, ஆனா நீயோ மேல மேல கோபத்தை வரவழைப்பது போல ஏதாவது செய்ற? உன்னை வச்சிக்கிட்டு என்ன செய்றதோ தெரியல," என்று அவன் கொஞ்சம் குரலை உயர்த்தி பேச,
"ஆமாம் நான் உங்களுக்கு இப்படி ஏதாவது கஷ்டத்தைக் கொடுத்து கோபத்தை வர வைக்கிறேன். நானெல்லாம் மாறவே மாட்டேன் போல, பேசாம நான் உங்களுக்கு வேண்டாம் மாமா, இப்படி என்னை கல்யாணம் செய்துக்கிட்டு நீங்க ஏன் கஷ்டப்படணும்? பேசாம என்னை டைவர்ஸ் செஞ்சுடுங்க," என்று ஏதோ முடிவெடுத்தவள் போல் தீர்மானமாக கூறினாள்.
இப்படி ஒரு பதில் அவளிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்காதவன், ஏதோ சொல்ல வர, ஏற்கனவே அவன் குரல் உயர்த்தி பேசியதில், அருகில் இருப்பவர்கள் இவர்கள் மேல் கவனம் வைக்க, இனியும் இங்கு நின்று பேசுவது சரியாக வராது என்பதால்,
"நீ முதலில் வீட்டுக்கு வா, அப்புறம் டைவர்ஸ் பத்தி பேசலாம்," என்று சொல்லியப்படி அவளது கைப்பிடித்து அங்கிருந்து வேகமாக அழைத்துச் சென்றான்.
தொடரும்..