(Reading time: 11 - 22 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

போட்டோ எதாவது இருக்கா?”

போட்டோ இல்ல..ஆனாஹான்..அவங்களை வடநாட்டுப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க..”

ம்ம் ஏன்டா நம்ம சின்னராசு ராசாத்தி மகளைப் பத்தி சொல்லுறாங்கனு நினைக்குறேன்”,என்று பெரியவர் ஒருவர் சொல்ல அவளிடம் பேசிக் கொண்டிருந்தவர் சில நொடிகள் யோசனைக்குப் பின் நினைவு வந்தவராய்,

அட ஆமா..அவங்களைப் பத்தி என்ன தெரியணும்?”

அது..அவங்க பெத்தவகளோட தொடர்பு இல்லாமயே போச்சு..இப்போ அவங்க பையனுக்கு தாத்தா பாட்டியை காட்டணும்னு பிரிய படுறாங்க அதான்..”

ம்ம் என்னத்தை சொல்றது..அப்பன் ஆத்தா செத்தது கூட தெரியாம அவ போய் எங்கேயோ உக்காந்துருக்கா இத்தனை வருசமா!”

என்ன??”

ஆமாம்மா..அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு ஆறு மாசத்துக்குள்ளேயே அப்பன் ஆத்தா இரண்டு பேருமே செத்துப் போய்டாக.என்ன தான் கோவம் இருந்தாலும் காடைசி நேரத்துல கூட ஆவா பெத்தவங்களைப் பார்க்க வரவேயில்ல.. அவங்க தலையெழுத்து என்னத்தை பண்றது..”

அவங்க கல்யாணத்துல எதுவும் பிரச்சனையா?அவங்க கல்யாணம் பத்தி எதுவும் விவரம் தெரியுமா உங்களுக்கு?”

ம்ம் முழுசா எதுவும் தெரியாது..ஆனா ஊருகுள்ள பேசினதை வச்சு அந்த பொண்ணுக்கு விருப்பமில்லாம தான் அந்த கல்யாணத்தை பண்ணி வச்சாதா சொன்னாங்க..பெத்தவங்க மேல இருந்த கோபத்துல தான் அந்த பொண்ணு அப்பறம் இங்க வரேவே இல்லனும் சொன்னாங்க..அந்த சோகத்துல தான் அப்பன் ஆத்தா ரெண்டு பேரும் சாப்பாட்டுல விசம் கலந்து சாப்ட்டு செத்து போய்டாகனு கூட சொல்லுவாங்க..”

..இதைப் பத்தி இன்னும் விவரம் தெரிஞ்சவங்க யாரும் இருக்காங்களா?”

ம்ம் ஒரு கிழவி இருக்கு..கேட்டுப் பாருங்க ஆனா எந்தளவு நியாபகம் வச்சுருக்கும்னு தெரில..அதோ அந்த கோடில தெரியுதே அந்த வீடு தான்..”

ரொம்ப நன்றிங்க..”,என்றவள் அங்கு சென்று வாசலில் நின்று உள்ளே குரல் கொடுத்தாள்.

பின் நாற்பதுகளில் ஒரு பெண்மணி வெளியே வர மேலோட்டமாய் விஷயத்தை கூறியவளை உள்ளே அழைத்து அமரச் செய்தவர்,

சந்தியா எனக்கு தங்கச்சி மாதிரி தான் ஆனா என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல..அவ கல்யாணம் நடந்தப்போ நான் என் மாமியார் வீட்ல இருந்தேன்..அதுக்கப்பறம் அவளைப் பார்க்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.