(Reading time: 11 - 22 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

தழுவியது..

நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்கு அவளது கைப்பேசி அழைப்பு எங்கோ ஒலிப்பது போல் தோன்ற சட்டென எழுந்தவள் மணியைப் பார்த்தால் காலை ஐந்து என்றிருந்தது.மகிழன் தான் அழைத்திருந்தான்.இத்தனை காலையில் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே அழைப்பை ஏற்று காதில் வைத்தவளுக்கு மறுபுறம் கேட்ட செய்தி சற்று எதிர்பார்த்ததாகவே இருந்தது.

இன்னும் அரைமணி நேரத்துல நான் கிளம்பிடுறேன் மகிழன்..”,என்றவள் கூறியடியே அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

அவள் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டை அடைந்த நேம் மகிழனின் காரும் ரியாய் அங்கு வந்திருந்தது.

எப்படி நடந்தது மகிழன்?”

யாருக்கும் எதுவும் சரியாய் தெரியல..எதோ போன் வந்துருக்கு மாமா ரெண்டு பேரும் கிளம்பிப் போய்ருக்காங்க..போற வழியில ஆப்போஸிட் சைட்ல வந்த வேன் கன்ட்ரோல் இல்லாம வந்து மோதிருக்கு..”

இதை ஏற்கனவே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா உங்களுக்கு?”

என்ன சொல்ற ஷியாமா..இதுகாட்..அப்பாவும் இதே மாதிரி தான்!!!”,இருக்கும் இடம் மறந்து கத்திவிட்டிருந்தான் மகிழன்..

ரிலாக்ஸ்..நிறைய விஷங்கள் பேசணும் முதல்ல அங்க சூழ்நிலை என்னனு பர்ப்போம்..”,என்றவள் பேச்சை வளர்க்காது அவனோடு போர்டிங் ஏரியாவிற்குச் சென்றாள்.

நேராய் அவர்களை சேர்த்திருந்த அந்த மருத்துவமனைக்கு இருவருமாய் செல்ல இருந்த பதட்டத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து வந்ததை யாரும் கவனிக்கவில்லை.தியா தான் அவனிடத்தில் ஓடி வந்தாள்.

அத்தான் அப்பா…”

கவலைப்படாத தியாஒண்ணும் ஆகாது..”,என்றவன் தலைமை மருத்துவரைப் பார்க்கச் சென்றான்.

சிவியர் ஹெட் இன்ஜுரி எம்வீ..நிறையவே ப்ளட் லாஸ்..மார்னிங் டைம்னால உடனே பார்த்து அட்மிட் பண்றதுக்கு ஆள் இல்லாம இருந்துருக்காங்க..வி ஆர் ட்ரையிங் அவர் பெஸ்ட்..இருந்தாலும் எதையும் உறுதியா சொல்ல முடியாது..”

டாக்டர்!!”

புரியுது மகிழன்..ஆனா நான் உண்மையை சொல்லி தானே ஆகணும்..அதுமட்டுமில்லாம

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.