இரண்டுபேர்ல மிஸ்டர் ராகேஷ்க்கு இரண்டு காலையுமே ரிமூவ் பண்ண வேண்டிய நிலைமை வீ ஆல்ரெடி டன்தட்..ஆனா சர்வேஷ் தான்..
“!!??”
“நினைவு இழந்துட்டே வரறார்..ரொம்ப சீரியஸ் தான்..கோமாக்கு போறதுக்கான வாய்ப்புகள் இருக்கு..ஆனா அதுகூட பாஸிப்லிட்டீஸ் கம்மி தான்..டேக் கேர் ஆப் எவ்ரி ஒன்..”,என்றவர் அவனைக் கடந்துசெல்ல ஒன்றும் புரியாதவனாய் நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருந்தவனின் தோளை அழுத்தமாய் பற்றியவள்,
“பீ ஸ்ட்ராங் மகிழன்..உங்களோட தைரியம் தான் மத்தவங்களை மீட்டு எடுக்கும்..”,ஷியாமா கூறியதில் இருந்த உண்மை உரைக்க ஆமோதிப்பாய் தலையசைத்தவன் வேகமாய் ஐசீயுவை நோக்கிச் சென்றான்.
ஒவ்வொருவருக்கும் முடிந்த வரை திடப்படுத்தியவன் ஒரு கட்டத்திற்கு மேல் ஓய்ந்து போய் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.மாலை ஏழு மணியளவில் அவர்களைச் சந்தித்த மருத்துவர்,
“சர்வேஷ் உயிருக்கு ஆபத்து இல்ல ஆனா கோமா ஸ்டேஸ்க்கு போய்ட்டார்.நினைவு எப்போ வேணாலும் வரலாம்..வராமயே கூட போகலாம்..வீ டிட் அவர் பெஸ்ட் மகிழன்..சாரி..”
சாந்தி தேவியும் ரமாதேவியும் அழுது கொண்டே உள்ளே செல்ல பிள்ளைகள் அவரைத் தொடர்ந்தனர்.வெளியே ஆஷிக் மற்றும் மோனிஷா மொத்தமாய் நடுங்கிப் போயிருந்தனர்.
அவர்கள் அருகில் சென்றவளாய்,”தைரியமா இருங்க..சீக்கிரமே சரியாய்டுவாங்க..”
“அக்கா எனக்கு நடக்குறதெல்லாம் பார்த்தா ரொம்பவே பயமா இருக்கு..எப்போ என்ன நடக்குமோனு..”
“எல்லாம் சரியாய்டும் மோனி..ஆஷிக் அம்மா சித்தியோட இவளையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ..”
அவர்களை அனுப்பிவிட்டு மகிழனைத் தேடிச் சென்றவள் அவன் அங்கு பின்புறம் இருந்த திறந்தவெளியில் நின்றிருந்தான்.
“இங்க என்ன பண்றீங்க?”
“நடக்குறதுக்கெல்லாம் எங்க அப்பா தான் காரணமோனு தோணுது ஷியாமா?”
“வாட் நான்சென்ஸ்!!!”
“அதான் இந்த ஆவி பேய்..இதுதான் காரணம்..”
“குழந்தை மாதிரி பேசுறீங்க..சரி அவங்க போன் கிடைச்சுதா..யார்கிட்ட இருந்து கால் வந்துருக்குனு தெரிஞ்சா…”