(Reading time: 11 - 22 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

ஒண்ணுமே கிடைக்கலையாம்..”,சற்றே கடுப்பாய் வந்தன வார்த்தைகள்.

சரி இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க..உங்க அப்பவோட இறப்பும் இப்படி இருக்குனு நான் சொன்னதுக்கு காரணம் அவர் ஆத்மா பழிவாங்குதுனு சொல்றதுக்காக இல்ல..ஒரு வேளை அவரோட இறப்புக்கும் இவங்க ரெண்டு பேருக்கும் சம்மந்தம் இருக்குமோ அப்படி இல்லைனா எதோ ஒரு நோக்கத்தில் உங்க அப்பாவை கொல்ல நினைச்சவங்க தான் இவங்களையும் கொல்ல நினைச்சுருப்பாங்களோங்கிற அர்த்தத்துல கேட்டேன்…”

என்ன சொல்ற நீ???!”

மகிழன் நிறைய விதத்துல யோசிக்க வேண்டியதா இருக்கு..சரி உங்க கிட்ட நிறைய சொல்லணும்னு சொன்னேனே..உங்க அம்மா ஊருக்குப் போய் விசாரிச்சதுல தெரிய வந்த விஷயங்கள்..”,என்று தொடர்ந்தவள் அனைத்தையும் கூறிவிட்டு அவன் முகம் பார்க்க அப்பட்ட அதிர்ச்சியோடு நின்றிருந்தான் மகிழன்.

அவங்க அம்மாவோட சிநேகிதி அமுதானா அப்போ அம்மாவோட இருக்குறது!!!!?”

என்னோட கணிப்பு சரினு சொன்னா இங்க உங்க வீட்ல இருக்குறது உங்க பெரியம்மா சரண்யா தேவி..அதாவது உங்க அம்மாவோட அக்கா..”

ஷியாமா என்ன சொல்ற அம்மாவுக்கு அக்கா இருக்காங்களா?ஆனா அப்பறம் ஏன் யாரோ ஒருத்தரா இங்க இருக்கணும்?”

இதுக்கெல்லாம் பதில் அவங்க தான் சொல்லணும்.அந்த அமுதா அவங்களோட சின்ன வயசு போட்டோவை காட்டினாங்க..அதுல உங்க அம்மா அப்பறம் அவங்க அக்காவும் இருந்தாங்க..இதோ..”,என்றவள் தன் மொபைலில் இருந்த புகைப்படத்தைக் காட்டினாள்.

சரண்யாவோட பள்ளிக்கூடத் தோழி தான் இந்த அமுதா.அப்பறம் பக்கத்து வீட்டுகாரங்கங்கிற முறையில உங்க அம்மாவுக்கும் நல்ல நட்பா இருந்துருக்காங்க..

இந்த அமுதாவோட பாட்டி வைத்தியர் தொழில் பார்த்ததுனால அவங்களும் சரண்யாவும் நிறைய விஷயங்களைக் கத்துகிட்டு இருந்துருக்காங்க..உங்க அப்பா அம்மா கல்யாண சமயத்துல உங்க பெரியம்மா  எதோ ஒரு ஊர்ல நடத்தப்பட்ட ஒரு முகாம்ல கலந்துக்குறதுக்காக ஒரு வாரம் அமுதாவோட பாட்டியோட  போய்ருக்காங்க..அதுக்கப்பறம் நடந்த எதுவும் யாருக்கும் தெரியல..

அவங்க எப்படி இங்க வந்தாங்க?தன்னை யாருனு சொல்லாம ஏன் இருக்காங்க?அப்பா அம்மா இறந்தப்போ எங்க போனாங்க?இந்த மாதிரியான எல்லா கேள்விகளுக்கும் அவங்க தான் பதில் சொல்லணும்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.