“ ஒரு பாத்திரத்துல தண்ணீர் பிடித்து வைக்கலாம். இன்னொரு பாத்திரத்தை சமைக்க வச்சுக்கலாம்.”
“சமைக்கறதுக்கு ஸ்டவ் வேணாமா?” அவன் கேட்கவும்,
அச்சோடா… அப்பாவி புள்ளையா இருக்கே என்பதுபோல பார்த்தாள்.
“பரண்ல வச்சு சமைக்க முடியுமா? நெருப்பு பிடிச்சுகிட்டா என்ன ஆகும்? கீழேதான் சமைக்கணும். மூணு கல்லை சேர்த்து போட்டால் அடுப்பு ரெடி. கொஞ்சம் காய்ந்த குச்சிகளை பொறுக்கிக்கணும். பெரிய கட்டைகளும் வேணும்.”
“தீப்பெட்டியாவது வேணுமில்ல..”
“இங்கே இருந்தா சரி… இல்லாட்டி சிக்கிமுக்கி கல்லை வச்சு தட்டி நெருப்பு மூட்டிக்கலாம்”
ஆஹாங்… என்னமா ப்ளான் செய்துட்டே இருக்கிறாளே..? ஒருவேளை அந்த அட்வென்சர் சீரியலை பார்த்திருப்பாளோ…
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.? டிவியை பார்த்துட்டு பேசறியா? டிவியில் காட்டும்போது ஈசியாக தெரியும். ஆனால் அதை செய்வது ரொம்ப கஷ்டம்.”
“ம்ஹூம்… நான் தாத்தாகூட நிறைய தடவை காட்டிற்கு வந்திருக்கேன். இங்கே முயல் கிடைக்கும்… காட்டு கோழி கிடைக்கும்… வேட்டையாட வருவாங்க. முந்தியெல்லாம் மான்கூட வேட்டையாடுவாங்க. எங்க கொள்ளு தாத்தா புலியை வேட்டையாடி இருக்கார்.”
அம்மாடியோ, பெரிய வேட்டைகார பரம்பரையா? அதுதான் அந்த உற்சாகமா?…
“ஓ புரிஞ்சிடுச்சு. காட்டு வாழ்க்கையில் உனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. பட், எனக்கு அந்த அளவிற்கு கிடையாது.”
“உங்க அளவிற்கு அறிவு எனக்கு கிடையாது சார்.” என்றவள்..
“ஆஹா… இதோ தீப்பெட்டி கிடைச்சுட்டது. பத்திரமாக ஈரம்படாமல் வச்சுக்கணும்.” என்றாள்.
“இது கம்பளி போர்வை… ஒண்ணுதான் இருக்கு.. நீங்க வச்சுக்கோங்க”
என்னவொரு தாராளம்…? அவனை குட்டி பையன்போல ட்ரீட் செய்கிறாளோ?
“அதெல்லாம் எனக்கு வேண்டாம். குளிரெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. நான் பாஸ்டன் போயிருந்தப்போ இதைவிட குளிரில் இருந்திருக்கேன். ஸோ… நோ ப்ராப்ளம்”
“நல்லது சார். நாம இப்போ சில பொருட்களை சேகரிக்கணும். வாங்க கீழே போகலாம்.” அவனை அழைத்தாள்.
“என்ன வேணும் அதிதி..?”
“நான் சொன்னேனே. காய்ந்த மரக்கட்டைகள்… குச்சிகள் வேணும். அடுப்பு ரெடி பண்ணனும்