(Reading time: 9 - 18 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

என்ன சொல்வாங்க? +2 தான்னு சொன்னா அவங்களுக்கு ஒருமாதிரி இருக்குமில்ல, அதுக்காகவாவது நான் ஒரு டிகிரியாவது முடிக்கணும் ம்மா," என்று அவள் சொல்ல,

"இங்கப்பாரு நித்தி, நீ படிக்கறதுக்கு நான் தடையா இருக்கப் போறதில்ல, நல்லா படி. ஆனா இந்த காலேஜூக்கு எல்லாம் போக வேண்டாம், வீட்ல இருந்து படிப்பாங்கல்ல, அப்படி படி. வீட்டு வேலையெல்லாம் நானே பார்த்துக்கிறேன். நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் படி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்ன?" என்று அவர் சொல்லவும்,

"ஏன் ம்மா?" என்றுக் கேட்டாள்.

"இங்கப்பாரு நித்தி, இப்போ கார்த்திக் உன்னை படிக்க வைப்பதில் ஆர்வமா இருக்கான். ஆனா அதுவே 3 வருஷமும் நீடிக்குமான்னு தெரியாது. நீ காலேஜ் போயிட்டு வந்து படிக்கிறதில் கவனத்தை செலுத்த ஆரம்பிச்சிட்டேன்னா, அப்புறம் கொஞ்ச நாளில் பொண்டாடி நம்மளை கவனிக்கறதே இல்லைன்னு கார்த்திக்கு தோன ஆரம்பிச்சிட்டா, அப்புறம் உறவில் விரிசல் வர ஆரம்பிச்சிடும், அதுக்கு தான் டா அம்மா சொல்றேன். கேட்டுக்கோ ம்மா,"

"ஆனா மாமா தானே ம்மா என்னை காலேஜூக்கு போய் படிக்க சொன்னாங்க, அப்புறம் அவங்களே அப்படி நினைப்பாங்களா?"

"ஆம்பிளைங்க மனசு நிலையில்லாதது, இன்னைக்கு ஒன்னு சொன்னா, அதை நாளைக்கு மாத்தி சொல்வாங்க, இன்னைக்கு உன்னை காலேஜூக்கு போய் படிக்க வைக்கணும்னு நினைக்கிற கார்த்திக், நாளைக்கே பொண்டாட்டி கூட இருந்து பார்த்துக்கல, இன்னும் தங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறக்கலன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டான்னு வச்சிக்க? அப்புறம் உங்க வாழ்க்கையில் பிரச்சனை வர ஆரம்பிச்சிடும், அப்புறம் நிம்மதி போயிடும்,

அதுக்கு தான் சொல்றேன் நீ காலேஜூக்கு போய் படிக்க வேண்டாம், அதுக்கு பதிலா வீட்ல இருந்து படி. எப்படி படிச்சா என்ன? நல்லா படிக்கணும்னு மனசுல நினைச்சா வீட்ல உட்கார்ந்து படிச்சாலே நல்லா படிக்க முடியும்."

"மாமா இதுக்கு ஒத்துவாங்களான்னு தெரியலையே?"

"நீ சொல்ற விதத்தில் சொல்லு, கார்த்திக் புரிஞ்சுப்பான்." என்று சொல்லிவிட்டு வஞ்சி தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் நித்யாவிற்கு தான் அந்த நிமிடத்திலிருந்து மனதில் குழப்பம் சூழ்ந்துக் கொண்டது. அதே குழப்பத்தோடு அன்றைய பொழுதை கழித்தாள்.

இரவு வீட்டிற்கு  வரும்போதே கார்த்திக் சில கல்லூரிகளிலிருந்து விண்ணப்ப படிவங்கள் வாங்கி வந்திருந்தான். சாப்பிட்டு முடித்ததும் இருவரும் அறைக்கு வரவும், "நித்தி நீ +1, +2 வில் என்ன க்ரூப் எடுத்து படிச்ச?" என்றுக் கேட்டான்.

"காமர்ஸ் தான் மாமா,"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.