பணிவிடை செய்யட்டும்னு சொல்ற சாதாரண மனிதன் இல்ல, நீ நல்லாப் படிக்கணும், வேலைக்குப் போகணும், இல்ல நம்ம ஆஃபிஸ்க்கு வந்து தொழில் கத்துக்கணும்னு நினைக்கிறவன் தான் நான். அதனா இந்த குழப்பமெல்லாம் வேண்டாம்,
அப்புறம் உன் படிப்பு முடியும் வரை நம்ம குழந்தை பெத்துக்கிறத தள்ளி போட்றதிலும் எனக்கு எந்த பிரச்சனையுமில்ல, ஏன்னா திடீர்னு குழந்தை உண்டாகிடுச்சுன்னா அப்புறம் படிப்பில் நீ கவனம் செலுத்த முடியாம போயிடும், 3 வருஷம் தானே சீக்கிரம் ஓடிடும் பாரு,
அத்தைக்கு நான் பேசி புரிய வைக்கிறேன். புரிஞ்சிக்கிட்டாங்கன்னா தடை சொல்ல மாட்டாங்க, அவங்களே நீ காலேஜூக்கு போய் படின்னு சொல்வாங்க, அதனால இந்த குழப்பத்தை தூர தூக்கிப் போட்டுட்டு என்னோட வந்து பார்ம் பில் செய்," என்று சொல்லவும் நித்யாவும் ஆர்வத்துடன் தலையாட்டியவள், அவனோடு இணைந்து படிவத்தை பூர்த்தி செய்தாள்.
தொடரும்..